/indian-express-tamil/media/media_files/SdPRIhGwu3w0o1CFfH5K.jpg)
ஒரு மனிதன் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது முக்கியம். அப்படி இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கு காலையில் மலம் கழிப்பது என்பது பெரிய சிக்கலாக இருக்கும். ஒரு சிலருக்கு காலையில் இல்லாமல் இரவில் மலம் கழிக்க வரும். இன்னும் ஒருசிலர் சாப்பிட்டவுடன் மலம் கழிக்க செல்வர்கள். இப்படி இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது சற்று குறைவாகத்தான் இருக்கும்.
உடலில் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை காரணமாக இருப்பது இந்த மலச்சிக்கல் தான். காலையில், இல்லாமல் இரவில் மலம் கழிப்பது, சாப்பிட்டால் மலம் கழிக்க வரும் என்பது, சாப்பட்டவுடன் மலம் கழிப்பது என பல சிக்கல்கள் இருக்கிறது. நமது உடலில் இருக்கும் அதிகப்படியான வாதம் மலம் வழியாகத்தான் வெளியில் போகும். இதனால் சரியாக மலம் கழிக்க, வாரத்தில் 3 நாட்களாவது கீரையை கடைந்து சாப்பிடுவது நல்லது.
பொன் ஆவாரை சூரணம் இருந்தால் அதை ஒரு ஸ்பூன் எடுத்து சுடு தண்ணீரில் கரைத்து தினமும் இரவில் குடித்தலே அடுத்த நாள் காலையில் மலம் கழிக்க சிரமம் இல்லாமல் இருக்கும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதனை பயன்படுத்தலாம். வீட்டுக்குளே இருக்கும் குழந்தைகள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு இந்த மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்கும். இவர்களுக்கு நிலவாரை அல்லது பொன்ஆவாரை பொடியை கொடுக்கலாம்.
இந்த பொடி குடலில் இருக்கும் மொட்லிட்டியை தூண்டி, மலச்சிக்கல் இல்லாமல், சரியாக மோஷன்’ போகும்படி செய்யும் என்று டாக்டர் யோக வித்யா தனது வீடியோவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.