/indian-express-tamil/media/media_files/2024/11/24/7lucPbjxNG4BjEEhYVkj.jpg)
உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவுப் பெட்டியில் இதுபோல ஒரு சாதம் செய்து கொடுத்தால், அதைத் திறக்கும்போதே கமகமக்கும் வாசனையில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள், அவ்வளவு அற்புதமாக இருக்கும்!
தேவையான பொருட்கள்:
மல்லி - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
காய்ந்த கறிவேப்பிலை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி - சிறிதளவு
சாதம் - 1 கப் (அல்லது தேவையான அளவு)
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் கொத்தமல்லி ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மூன்று வரமிளகாயையும் சேர்த்து, காய்ந்த கறிவேப்பிலை ஒரு கப்பளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வறுக்கலாம்.
இப்போது வறுத்த பொருட்களை ஆறவிட்டு, பின்னர் மிக்ஸியில் போட்டுப் பொடி செய்துகொள்ளவும். மாவு போல நைஸாக இல்லாமல், சற்று பொரபொரவென்று அரைத்தால் போதும். இந்த வாசனை இரண்டு வீடுகளுக்குக்கூட மணக்கும்!
அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கால் ஸ்பூன் நெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கவும். இப்போது, நாம் அரைத்து வைத்துள்ள பொடியை இதில் சேர்த்து, ஒரு நல்ல வாசனை வரும்வரை வதக்கவும்.
மதியான நேரத்தில் குழந்தைகளுக்கு இதுபோல சாதம் செய்து கொடுத்தால், அந்தப் பூங்காமணத்துடன்கூடிய டிபன் பாக்ஸைத் திறந்து குழந்தைகள் எவ்வளவு ருசித்துச் சாப்பிடுவார்கள் பாருங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.