/indian-express-tamil/media/media_files/2025/05/07/JUyxoBvWUQ7Sawh5IORG.jpg)
4000 வியதிகளுக்கு மேல் குணப்படுத்தும் முடவாட்டுக்கால் என்று, டாக்டர் எஸ்.எஸ்.விஜி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், ஆட்டுகால் போன்று இருப்பதால், இதனை முடவாட்டுக்கால் என்று சொல்வார்கள். இந்த கிழங்கு, முட்டி வலி, முதுகு தண்டுவடம் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். முதுகு தேய்மானம், தோல்பட்டை வலி, உள்ளிட்ட எந்த வலியாக இருந்தாலும், இந்த கிழங்கில் சூப் வைத்து 24 நாட்கள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
மூட்டுவலி காரணமாக நடக்க முடியாமல் இருப்பவர்கள் கூட இந்த சூப் சாப்பிட்டால் நடக்க முடியும். உடலில் அசிடிட்டி, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள், கிட்னி தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும் என்று கூறியுள்ளார்.
இந்த முடவாட்டுக்கால் கிழங்கை வைத்து சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு – 2
நெல்லெண்ணெய் – 2 டீ்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் இடித்தது – ஒரு கைப்பிடி
இடித்த இஞ்சி பூண்டு – ஒன்றரை ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் முடவாட்டுக்கால் கிழங்கை தோல் சீவி, துண்டு துண்டுகளாக நறுக்கி, உரலில் போட்டு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து ஒரு வாணலில், நல்லெண்ணெய், சேர்த்து,சீரகம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து தாளித்து, இடித்து வைத்துள்ள முடவாட்டுக்கால் கிழங்கை சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிவிட்டு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும்.
கொதித்து வந்தவுடன், மிளகு பொடியை அதனுடன் சேர்த்து, வடிகட்டி எடுத்து, அதில் மல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான முடவாட்டுக்கால் சூப் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.