Advertisment

இரவில் வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு... இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

Tamil Health Update : நமது செரிமான அமைப்பு சரியாக செயல்பட்டால் நமது பெரும்பாலான பிரச்சனைகள் குறையும் கிராம்பு இந்த விஷயத்தில் பெரிதும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு; வெதுவெதுப்பான தண்ணீர்... இவ்ளோ நன்மை இருக்கு!

Tamil Health Update : சமையலில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் சமையலறையில் கிராம்பு முக்கிய ஆரோக்கிய பொருமாள பயன்படுகிறது. ஒரு பசுமையான மரத்திலிருந்து சுவை பல நன்மைகளை கொடுக்கும் இந்த சிறிய உலர்ந்த பூ மொட்டுகள் சமையலுக்கு மட்டுமல்லாது பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

Advertisment

இந்தியாவில் அதிகம் உண்ணப்படும் பெரும்பாலான வெளிநாட்டு உணவு பொருட்களுக்கு சுவை அதிகரிக்க கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதில்  யூஜெனால் இருப்பதால், மன அழுத்தம், பார்கின்சன், பல்வலி, உடல்வலி போன்ற பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. மேலும கிராம்பில் வைட்டமின் ஈ, சி, ஏ, டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட், ரிபோஃப்ளேவின் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பண்புகளை கொண்டுள்ளது.

கிராம்பு நன்மைகள் மற்றும் பயன்கள்

செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது

இரவில் வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு மிகவும் நல்லது, இது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும். நமது செரிமான அமைப்பு சரியாக செயல்பட்டால் நமது பெரும்பாலான பிரச்சனைகள் குறையும் கிராம்பு இந்த விஷயத்தில் பெரிதும் உதவுகிறது.

பல்வலியைப் போக்கும்

பற்கள் தொந்தரவு செய்தால் கிராம்பு சாப்பிடுங்கள் என்று நம் பாட்டி சொல்வார்கள். வெதுவெதுப்பான நீரில் கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், வாய், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தை நீக்கி, உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும். கிராம்பை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு சேர்த்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தைப் போக்க சிறந்த வழியாகும். கிராம்பு பல்வலிக்கான பிரத்யோக மருந்தாக பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா ஆகிய தொற்றுகளுக்கு தினமும் ஒரு கிராம்பு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். கிராம்பு வைரஸ் எதிர்ப்பு மற்றும் இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது

இந்தியாவில் நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதெல்லாம் தேநீர் அருந்துகிறோம், ஆனால் அதில் சில கிராம்புகளை சேர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து பெரும் நிவாரணம் தருவதோடு, உங்கள் உணர்வுகளையும் கட்டுப்படுத்தும். கிராம்பு தேநீர் நம்மை ஆசுவாசப்படுத்தி தசைப்பிடிப்பை குறைக்கிறது.

மன அழுத்தம் இருக்கும் உடலுக்கு, கிராம்பு எண்ணெய் மசாஜ் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உண்மையில், அவை மனச் சோர்வு, உடல் சோர்வு, மற்றும் பதற்றம் ஆகியவற்றைக் குறைப்பதால் ஸ்பாக்களில் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஆரோக்கியமான சருமத்திற்கு நல்லது

கிராம்பு எண்ணெய்யை மேற்பூச்சு தடவுவது முகப்பருவை நீக்குவதற்கு மிகவும் நல்லது. இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை அகற்ற உதவும். தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு, மற்ற அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலந்த கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துங்கள்; இது தழும்புகளை மறைய வைக்கும்.

கிராம்பு அற்புதமானது, பல்துறை, உணவுக்கு சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்கிறது ஆனால் எல்லா மசாலாப் பொருட்களைப் போலவே, கிராம்பையும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும், எல்லா உணவு பொருட்களிலும் கிராம்பை அதைச் சேர்ப்பது எப்போதும் பாதுகாப்பான ஒன்றாக இருக்காது. பெரிய அளவில் கிராம்பை உட்கொள்வது தீவிரமானது இல்லை. மிகவும் வலுவாக இருப்பதால் அது எரியும் உணர்வு அல்லது எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் சில விளைவுகளை ஏற்படுத்தலாம் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Health Tips Tamil Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment