நாம் உண்ணும் பழ வகைகளில் முக்கியமானவது கொய்யா பழம். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் கிடைக்கும். கொய்யாவில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
Advertisment
கொய்யாவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த அழுத்தத்தையும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. கொய்யா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இதனால் இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. கொய்யாவில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க கொய்யா உதவுகிறது. இந்த கொய்யா பழம் உடலில் 9 நோய்களுக்கு தீர்வை கொடுக்கிறது என்று உணவியல் நிபுணர் தாரணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ள வீடியோ பதிவில், கொய்யா பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது தான் என்றாலும் கூட, அதில் இருக்கும் விதையுடன் சாப்பிட்டால் தான் முழு நன்மையும் கிடைக்கும். கொய்யா பழத்தில் இருக்கும் விதை, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரும், கொய்யா விதையில் இருக்கும் ஃபைபர் கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் மறைமுகமாக இதயநோய் வராமல் தடுக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வரும் பெரிய கொய்யா பழத்தில் நார்ச்சத்து குறைவாக இருக்கிறது. இதை தாய்லாந்து கொய்யாப்பழம் என்று சொல்வார்கள். கொய்யாப்பழம் பழுத்தாலே ஒரு வாசனை வரும். ஆனால் இந்த கொய்யாவில் அந்த வாசனை வராது.
Advertisment
Advertisements
நாட்டு கொய்யா தான் உடலுக்கு நல்லது. இதில் உள்ளே வெள்ளை நிறத்தில் சதைகள், லைட் மஞ்சள் நிறத்தில் விதைகள் இருக்கும். இந்த விதைகளில் ஃபைபர் அதிகம் இருக்கிறது. அதற்கு அடுத்து, உள்ளே பிங்க் நிறத்தில் இருக்கும் கொய்யா மற்றும் அதன் விதைகள் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். கொய்யா பழத்தை எல்லோருமே சாப்பிடலாம். 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொய்யா ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதேபோல் கொய்யாவை ஜூஸாக சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.