வயிற்றுப்போக்கு என்பது பொதுவாக அனைவரும் சந்திக்கும் முக்கிய உடல்நல பிரச்னையாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஏற்படலாம். குழந்தைகளின் செரிமான அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாததால், அவர்கள் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படலாம். அதேபோல் வைரஸ் தொற்று பாதிப்புகள் கூட, குழந்தைகளில் வயிற்றுப்போக்குக்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கலாம்.
Advertisment
பெரியவர்களே ஒரு நாளைக்கு 2-3 முறை மோஷன் போனால் சோர்வாகிவிடுவார்கள். ஆனால், குழந்தைகள் இந்த பிரச்னை வந்தால், எப்படி தாங்கிக்கொள்வார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அதே சமயம், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்னைகளை தீர்க்க, ஒரு அரியவகை கிழங்கு இருக்கிறது. இதுதான் கூவை கிழங்கு. ஏரோரூட் என்று அழைக்கப்படும் இந்த கிழங்கு, குழந்தைகளின் வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வாக அமைகிறது.
சிறுநீர் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும், சிறுநீரை தாராளமாகப் பிரிக்கவும் உதவும் உதவும் இந்த கூவை கிழ்ங்கு, உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது. இருமல், காய்ச்சல் மற்றும் நீர் வேட்கை போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உடலுக்கு வலிமை அளித்து, சருமத்திற்கு மென்மையைத் தருகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த கிழங்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில், கூவை கிழங்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடும் என்று தெரிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாண்டு தாவரமான இந்த கூவை கிழங்கு, கொழுப்பு இல்லாத முழுவதும் மாவுச்சத்து கொண்டது. செடியில் இருந்து கிழங்கை அறுவடை செய்தபின் மீண்டும் அந்த செடியை நட்டுவைத்தால் அடுத்த வருடம் மீண்டும் இந்த கிழங்கை அறுவடை செய்யலாம்.
Advertisment
Advertisements
இந்த கிழங்கை வேகவைத்து, கூழாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, மற்றும வயிற்றுப்போக்கு தொடர்பான பிரச்னைகள் சரியாகும். இந்த கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஆரூட்ட மாவு உடலுக்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது.