சுகரை மாயமாய் மறைய வைக்கும் இந்தக் கஞ்சி... கொஞ்சம் பாலுடன் சேர்த்து இந்த நேரத்துல குடிங்க: டாக்டர் நித்யா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை குறைந்துகொண்டே வரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, உடல் எடை குறையும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை குறைந்துகொண்டே வரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, உடல் எடை குறையும்.

author-image
WebDesk
New Update
nithya diabetes

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை வியாதி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்று சொல்வார்கள்.

Advertisment

அதேபோல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை குறைந்துகொண்டே வரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, உடல் எடை குறையும். இதனை தவிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகள் சிறுநீர் சோதனை எடுக்கும்போது அதில் புரோட்டின், மற்றும் இதர சத்துக்கள் வெளியேறுவது தெரிய வரும். இந்த மாதிரியான சமயத்தில் தான் உடல் எடை குறைந்துகொண்டே போகும்.

அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், நம் தினசரி வாழ்க்கையில் செய்யும் சராசரியான வேலைகளை கூட செய்ய முடியூத நிலை ஏற்படும். இந்த மாதிரி இருப்பவர்கள் என்ன மாதிரியான ஊட்டசத்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது சித்த மருத்துவத்தில் பல உணவுகள் இருக்கின்றன. சூரணங்கள், நாவல்கொட்டை சேர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் சர்க்கரை நோய்க்கு பலன் தரக்கூடியது.

வாதம், பித்தம், கபம் இவை தொடர்ந்து 20 வகையான சர்க்கரை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்ற்கும் தனித்தனியாக மூலிகைகளை வைத்து தான் மருத்துவம் பார்க்க வேண்டும். அந்த வகையில் கருப்பு கவுனி அரிசிமாவு, நவதானிய மாவு, சிறுதானிய மாவு ஆகியவற்ற்றில் ஏதாவது ஒரு மாவில், களி அல்லது கஞ்சி வைத்து குடிக்கலாம். இவை சர்க்கரை நோய்கக்கும் நல்லது. அதே சமயம் இழந்த உடல் எடையையும் மீட்டு கொடுக்கும். அதேபோல் திரிபலா சூரணம், (கடுக்காய், நெல்லிக்காய், சாதிக்காய்) சாப்பிடலாம்.

Advertisment
Advertisements

இந்த திரிபலா சூரணத்தை கஷாயமாக செய்து அதில் கஞ்சி வைத்து சாப்பிடலாம். 5 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ திரிபலா சூரணத்தை சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் மாதிரி செய்ய வேண்டும். தண்ணீர் கொதித்து 2 லிட்டராக ஆனவுடன், அதை இறக்கி, அதில் கறுப்பு உளுந்து, கறுப்பு கொண்டைகடலை, கோதுமை, பச்சை அரிசி, பச்சை பயறு, கறுப்பு எள்ளு, ஆகியவற்றை தலா 100 கிராம் சேர்த்து அதனுடன் கொள்ளு சேர்க்கவும். அதன்பிறகு இந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் இந்த தானியங்களை எடுத்து 3 நாட்கள் வெயிலில் காயவைத்து, பவுடராக அரைத்து எடுத்துக்கொண்டு, இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு க்ளாஸ் வெந்நீரில் சேர்த்து கலக்கி குடிக்கலாம். இந்த பவுடரை கஞ்சி மாதிரி வைத்தும் குடிக்கலாம் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Diabetes Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: