மூட்டுக்கு மூட்டு வலி... வாரத்தில் 3 நாள் இந்த துவையல்; வலி பறந்து போகும்: புஷ்பவனம் குப்புசாமி சொல்லும் டிப்ஸ்
மூட்டுவலியை சரி செய்ய, பல இயற்கை முறை வைத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, மூட்டுவலிக்கு சிறந்த தீர்வை தரும் பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
மூட்டுவலியை சரி செய்ய, பல இயற்கை முறை வைத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, மூட்டுவலிக்கு சிறந்த தீர்வை தரும் பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
மூட்டு வலி என்பது ஒரு பொதுவான பிரச்சினை. உட்காரும்போதும், எழும்பும்போதும், நடக்கும்போதும், சில சமயங்களில் சாதாரணமாக இருக்கும்போதும் கூட மூட்டுகளில் வலி இருக்கும்.இந்த வலியை அலட்சியப்படுத்தாமல் அதன் காரணத்தையும், அதற்கான தீர்வுகளையும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் இது தானாகவே சரியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
Advertisment
மூட்டுவலியை சரி செய்ய, பல இயற்கை முறை வைத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, மூட்டுவலிக்கு சிறந்த தீர்வை தரும் பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை
Advertisment
Advertisements
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்
தேங்காய்
கறிவேப்பிலை
உப்பு
கடலை எண்ணெய்
செய்முறை:
முதலில் பிரண்டையை நார் எடுத்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு பிரண்டையை நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கி, பிரண்டையும் அதனுடன் சேர்த்து வதக்கி, மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்தால் பிரண்டை துவையல் தயார்.
மூட்டு தொடர்பான வலிகளை போக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதை தண்ணீர் சேர்த்து அரைத்தால் சட்னி மாதிரி ஆகிவிடும் என்பதால் தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரண்டை எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இது விரைவாக குணமடைய உதவும். இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. வயிற்றில் உள்ள வாயு தொல்லைக்கும் இது நல்ல நிவாரணம் அளிக்கிறது. பிரண்டைக்கு உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் தன்மை உண்டு. இதனால் மூட்டு வீக்கம், தசை வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.