/indian-express-tamil/media/media_files/2025/05/08/Y7taREOtTByvLrlnSBK0.jpg)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை தோல் அரிப்பு. இந்த தோல் அரிப்பு எதனால் வருகிறது. இதற்கு தீர்வு என்ன என்பது குறித்து டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார்.
தோல் அரிப்புக்கு முதல் காரணம் தோல்வறட்சி. தைராய்டு மாதிரியான பிரச்னைகள் இருந்தால், தோல் வறட்சியாக இருக்கும். சர்க்கரை நோயின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் தோல் அரிப்பு ஏற்படும். கல்லீரல் கழிவுகள் அதிகமாக இருந்தாலும் இந்த அரிப்பு பிரச்னை ஏற்படும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவு, சிறுநீரகம் மற்றும் ரத்தத்தில் உப்புச்சத்து அதிகமாக இருந்தாலும் இந்த அரிப்பு தன்மை ஏற்படும்.
நரம்பு கோளாறு மற்றும் வைட்டமின் சத்து குறைவாக இருப்பது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவது, உடலுக்கு ஒப்புக்கொள்ளாத உணவை சாப்பிடுவது போன்ற பிரச்னைகளும் இதற்கு காரணமாக இருக்கும். மற்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், தோல் அரிப்பு ஏற்படும். அதேபோல் தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்வர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
இந்த அரிப்பை குறைக்க வேண்டும் என்றால், உடனடியாக குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். அடுத்து குடலை வலுப்படுத்தக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து கல்லீரலை வலுப்படுத்தக்கூடியாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தக்கூடிய உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரிப்பை போக்குவதற்கு, குப்பைமேனி இலைகளை எடுத்து காயவைத்து பொடி செய்து, வைத்தக்கொள்ளுங்கள்.
இந்த பொடியை வெந்நீரில் கலந்து மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடல் கழிவுகளை வெளியேற்றும். குப்பைமேனி நச்சுத்தன்மையை அகற்றும். உடலில் பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற நச்சுத்தன்மை இருந்ததால், அவற்றை அக்ற்ற குப்பை மேனி பயன்படும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.