குடல் கேன்சரைத் தடுக்கும் இந்தக் காய்... இப்படி பால் அடித்து சாப்பிடுங்க: டாக்டர் அஸ்வின்
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, மலம் கழிக்க முக்கிய பணிகளை செய்வது குடல். இந்த குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் பல நோய்களை தீர்க்க முடியும் என்று சொல்வார்கள்.
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, மலம் கழிக்க முக்கிய பணிகளை செய்வது குடல். இந்த குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் பல நோய்களை தீர்க்க முடியும் என்று சொல்வார்கள்.
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, மலம் கழிக்க முக்கிய பணிகளை செய்வது குடல். இந்த குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் பல நோய்களை தீர்க்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் குடலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, என்ன செய்வது? ஒரு தேங்காய் இருந்தால் போதும் அதில் இருந்து பால் எடுத்த குடித்தாலே குடல் சார்ந்த பிரச்னைகளை விரட்டலாம் என்று, டாக்டர் அஸ்வின் கூறியுள்ளார்.
Advertisment
பொதுவாக வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் இருந்து நமது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில், பலருக்கும் பயன் என்ன என்றே தெரியாதபோதும் தினசரி பயன்படுத்தும் முக்கிய பொருள் தான் தேங்காய். சாதாரணமாக வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய், நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவி செய்கிறது என்று சொல்லலாம்.
மேலும் தாய் பால் தான் சிறந்த அருமருந்து என்று சொல்வார்கள். அதற்கு அடுத்தப்படியாக தேங்காய்பால், மனிதனுக்கு பல வழிகளில் நன்மைகளை கொடுக்கிறது. தேங்காய் தானே என்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இதில் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும், குடல் தொடர்பான கேன்சர் (புற்றுநோய்) வருவதை தடுப்பதற்கும் தேங்காய் முக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
Advertisment
Advertisements
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் தேங்காய் முக்கிய பயனை கொடுக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் தினமும் 2 துண்டு தேங்காய் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கு தேங்காய் முக்கிய நன்மையை கொடுக்கிறது. அதேபோல் தேங்காயில் இருக்கும் நல்ல கொழுப்புகள் எலும்புக்கும் மூட்டுக்கும் நல்லது. தேங்காயை அளவாக சாப்பிட்டு அதன் நன்மைகளை பெறலாம்.