/indian-express-tamil/media/media_files/2025/01/18/xXLr5XksVlDRNYvv9j70.jpg)
உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தேன். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாக தேன் உணவு பொருளாக நாம் சாப்பிட்டு வருகிறோம். இருக்கின்ற பானங்களில் முக்கியமானவது என்று புத்தரின் சீடர் ஒருவர் குடிப்பிட்டது நீர்த்த தேன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். இந்த பழக்கம் 3 ஆயிரம் வருடங்களாக இருக்கிறது.
தேனை தண்ணீரில் கலந்து குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருககிறது. இதனை தினசரி நாம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் ஆசைப்படும்போது தேனை நாக்கில் தடவி விடலாம். சிறுவயதில் இட்லி மற்றும் தோசைக்கு தேனை சேர்த்து சாப்பிட்டால் தவறில்லை. அதே சமயம் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் தேனை எடுத்துக்கொள்ள வேண்டாம். சர்க்கரை வியாதி கட்டுக்குள் வந்தபிறகு எப்போதாவது கட்டுப்பாடுடன் எடுத்துக்கொள்ளலாம்.
தேனும் ஒரு கூட்டு சர்க்கரை என்பதால், உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் தேனை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் இனிப்பு மட்டும் அல்ல, தேனில் இருக்கும் மகரந்த துகள்கள், நொதித்தல், பல்வேறு கணிமங்கள் குறித்து உலகில் இருக்குமு் பலரும் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஒரு சாதாரண ரெஸ்பிரெட் இம்யூனிட்டில் தொடங்கி கேன்சருக்கான, இம்யூனிட்டி வரை தேனில் பயன்தரக்கூடிய விஷயங்கள் பல இருக்கிறது.
தேனை சிறுவயதில் இருந்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, புற்றுநோய்க்கான பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். தேன் உணவு மற்றும் பானங்களில் இனிப்புச் சுவையை சேர்க்கப் பயன்படுகிறது. இது ரொட்டி, தயிர், தேநீர் மற்றும் பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் தேன் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது காயங்களை ஆற்றவும், இருமலைக் குறைக்கவும், தொண்டைப் புண்ணுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.