ஒரு மனிதன் 45-50 வயதை நெருங்கும்போது கேழ்வரகை விட, கம்பு சோறு சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், கம்பு சோறு சாப்பிட்டீங்கன்னா அது உடைந்து அதிலிருந்து கார்போஹைட்ரேட் பிரிவதற்குள், அந்த உணவு இறைப்பை தாண்டி சிறு உடலை தாண்டி கீழ போய்விடும். சிறு உடலின் மேல் முதல் பாங்கை தாண்டிவிட்டால், அங்கிருந்து குளுக்கோஸ் அப்சார்ப் ஆகறதுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும்.
Advertisment
அதற்காகத்தான் கம்பு சோறு சாப்பிடுங்க. கம்புசோறு சாப்பிட்டீங்கன்னா சர்க்கரை பெருசா உடனடியாக கூடாது. வரகரிசியில் சர்க்கரை உடனடியாக கூடாது ஆனால் கேழ்வரகு சாப்பிட்டால் சர்க்கரை கூடும். ராகி நல்லதுதானே நான் ராகி தோசை சாப்பிடுறேன், ராகி களி சாப்பிடுகிறேன் என்றால், சர்க்கரை கூடிவிடும். ராகி குழந்தைகளுக்கு நல்லது. சின்ன குழந்தை பெண் குழந்தை 15 வயசு இப்பதான் பருவம் அடைந்த பெண் என்றால் அவருக்கு கேழ்வரகு கொடுக்கலாம்.
கேழ்வரகில் கால்சியம் இருக்கு அயன் இருக்கு பினால்ஸ் இருக்கு எல்லாமே இருக்கு. ஆனால் 45 வயசு 50 வயசு முடிந்தவர்களுக்கு கம்புதான் நல்லது என்று கூறியுள்ளார். கம்பில் வைட்டமின் பி, இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம்.
Advertisment
Advertisements
கம்புக்கு குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index) இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை மெதுவாக வெளியிடுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். கம்பில் உள்ள சத்துக்கள் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்த உறைவைத் தடுப்பதன் மூலம் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும்.