இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இரு நோய்களும் உடலில் ஏற்படும்போது சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து டயாலஸிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
Advertisment
அதிகமான ரசாயன உரம் சேர்த்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானிய வகைகளை சாப்பிடும்போது, ரத்தத்தில் நஞ்சுகள் தங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். ஒரு நபருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு வாரத்திற்கு 2-3 முறை டயாலஸிஸ் செய்ய வேண்டும். அடிக்கடி நுரையீரலில் தண்ணீர் தேங்கக்கூடிய ஒரு வாய்ப்பும் ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய தொடங்கும். அதேபோல் சிறுநீரகத்தில் கல் பிரச்னை ஏற்படும்போது அதனால் ஏற்படும வலியை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு வலியாக இருக்கும்.
இந்த பிரச்னைகளுக்கு இதற்கு தீர்வாக இயற்கையில் கிடைக்கும் ஒரு தாவரத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக வாழைதண்டை மட்டும் வைத்து சிறுநீரக கற்கல் பிரச்னைக்கு தீர்வு காணலம். தினமும வாழைத்தண்டு ஜூஸ் குடித்தாலே இந்த பிரச்னை சரியாகிவிடும். வாழைத்தண்டை எடுத்து துண்டு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அதனுடன், உப்பு, மிளகு தூள் சேர்த்து சீரக தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இப்படி குடிக்கும்போது சிறுநீரக கற்கல் மட்டுமல்லாமல், சளி, இருமல், காதுவலி, தொண்டை வலி மற்றும் அடிவயிற்று தொப்பையை குறைக்கும். அதனால் வாழைத்தண்டை மருந்தாக பார்க்காமல், உணவாக சாப்பிட்டு பயன்படுத்தலாம்.