சேப்பங்கிழங்கை இனி இப்படி வேக வையுங்க... நாக்கு அரிக்காது: உணவியல் நிபுணர் தாரிணி டிப்ஸ்
முதலில் கிழங்கை வேகவைத்து அதன்பிறகு, அதனை ப்ரை செய்து சாப்பிடலாம். ஆனால், கிழங்கை வேக வைக்கால், மசாலா எல்லாம் சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்க கூடாது.
முதலில் கிழங்கை வேகவைத்து அதன்பிறகு, அதனை ப்ரை செய்து சாப்பிடலாம். ஆனால், கிழங்கை வேக வைக்கால், மசாலா எல்லாம் சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்க கூடாது.
பூமிக்கு அடியில் விளையும் முக்கிய கிழங்கு வகைகளில் ஒன்று சேப்பங்கிழங்கு. அதிக நார்ச்சத்து அடங்கியுள்ள இந்த கிழ்ங்கு, குடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவி செய்யும். செரிமான கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இந்த கிழங்கில், உள்ள ஃபைபர் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து அதிக நேரம் பசியை கட்டப்படுத்தும். இதன் காரணமாக உடல் அதிகமாக கலோரிகளை குறைத்து, உடல் உடையை குறைக்கும் நிலை ஏற்படும்.
Advertisment
உடல் உடையை எடையை குறைக்கும் முயற்சிகளுக்கு சேப்பங்கிங்கு முக்கிய உணவாக பயன்படுகிறது. இந்த கிழங்கில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அதே சமயம் இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் லெவலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. நன்மைகள் பல இருந்தாலும், சேப்பங்கிங்கு, அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த கிழங்கை எடுத்தக்கொள்ளலாம்.
இந்த கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும்போது தோலை உரித்துவிட்டு வேக வைக்க கூடாது. அப்படி வேக வைத்தால், நாக்கில் ஒரு மாதிரியாக அரிப்பை ஏற்படுத்தும். அதனால் தோலுடன் வேகவைத்து வெந்து எடுத்தபின்பு தோலை உரித்து சின்ன சின்னதாக கட் செய்து, அதனை வறுத்து பொரியல் செய்து சாப்பிடலாம். இந்த கிழங்கு, குழகுழவென இருக்கும் தன்மை கொண்டது. ஆனால் இதனை எண்ணெயில் பொரித்து தான் சாப்பிடுவேன் என்று செய்வார்கள்.
இப்படி எண்ணெய்யில் இந்த கிழங்கை பொரிக்கும்போது அந்த கிழங்கில் இருந்து சிறு சிறு துண்டுகள் எண்ணெயில் விழும். இதனால் இந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது. பொரித்தபின் எந்த எண்ணெய்யும் மீண்டும் பயன்படுத்த கூடாது என்றாலும், இந்த எண்ணெய்யை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல், முதலில் கிழங்கை வேகவைத்து அதன்பிறகு, அதனை ப்ரை செய்து சாப்பிடலாம். ஆனால், கிழங்கை வேக வைக்கால், மசாலா எல்லாம் சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்க கூடாது.
Advertisment
Advertisements
எப்பாவது ஒருமுறை இவ்வாறு செய்து சாப்படுவது ஓ.கே. ஆனால், எப்போதும் இதே மாதிரி செய்து சாப்பிடுவது உடலுக்கு, ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும். வாரத்தில் ஒருமறை, 10 நாட்களுக்கு ஒரு சேப்பங்கிழங்கை எடுத்துகொண்டாலும் அதை டீப் ப்ரை செய்துதான் எடுத்துக்கொள்வேன் என்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என உணவியல் நிபுணர் தாரிணி கூறியுள்ளார்.