வேலியில் படர்ந்து கிடக்கும் இந்தக் கீரை... எலும்பை இரும்பு போல் மாற்றும் வல்லமை இருக்கு; இப்படி எடுத்துக்கோங்க: மருத்துவர் சிவராமன்
குழந்தை பருவத்தில் இருந்தே எலும்புகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும், வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலின் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து சரியாக இருக்க வேண்டும்.
குழந்தை பருவத்தில் இருந்தே எலும்புகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும், வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலின் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து சரியாக இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு எவ்வளவு அவசியமே அந்த அளவிற்கு, உடலில் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் அவசியம் தான். உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆரோக்கியம் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், தற்போது எலும்பு ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து, டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், நமது உடலில் பிறந்தது முதல் இறப்பது வரை முக்கியமாகு இருக்கக்கூடிய உடல் உறுப்பு எலும்பு தான். அப்படிப்பட்ட எலும்புகளை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உடலின் எலும்புகளும், அதன் இணைப்புகளும் மிகவும் முக்கியமானது. இதனால் குழந்தை பருவத்தில் இருந்தே எலும்புகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும், வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உடலின் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து சரியாக இருக்க வேண்டும். கால்சியம் குறைந்தால் உடலில் எலும்புகளின் திறன் மற்றும் வலு குறைந்துவிடும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முடியும் தருவாயில் அவர்களின் உடலில் கால்சியம் குறைந்துவிடுகிறது. அந்த நேரத்தில் கால்சியத்தை அதிகமாக தரக்கூடிய மருந்துகள் மற்றும் உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
Advertisment
Advertisements
இப்படி எலும்புகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் முதல் தேவை கால்சியம் நன்றாக இருக்க வேண்டும். தரைக்கு அடியில் விளையக்கூடிய அனைத்து உணவுகளிலும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கும். அதேபோல் பால், மோர் போன்ற உணவுகள் அதிகமாக கால்சியம் சத்துக்களை கொடுக்க வல்லது. ஒரு க்ளாஸ் மோரில் கிட்டத்தட்ட 280 மில்லிகிராம் கால்சியம் சத்து இருக்கிறது. இதனால் கோடை காலங்களில் மோர் அதிகம் சாப்பிடுவது நல்லது.
அதேபோல் கேழ்வரகை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரைகளில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் இருக்கிறது. ஆனாலும், ரொம்ப அதிகமான கால்சியம், எலும்பை வலுவாக வைக்கக்கூடிய கால்சிய சத்தை கொடுக்க்கூடிய பிரண்டை கீரை. இந்த பிரண்டை கீரையை துவையால அரைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.