New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/16/fRXhbZfuEKxM1fpkqtsC.jpg)
திண்பண்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் சுண்டல் பிரதானமாக இருக்கட்டும். நமது வீட்டில் செய்யக்கூடிய பஜ்ஜி, வடையில் கூட டிரான்ஸ்பிளக்ட் வரும். எண்ணெய்யை கொதிக்க வைத்தால் வரும்.
நமது ஆயுளை நீடிக்க வேண்டும் என்றால் சில திண்பண்டங்களுக்கு நோ சொல்ல வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். திண்பண்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் சுண்டல் பிரதானமாக இருக்கட்டும். நமது வீட்டில் செய்யக்கூடிய பஜ்ஜி, வடையில் கூட டிரான்ஸ்பிளக்ட் வரும். எண்ணெய்யை கொதிக்க வைத்தால் வரும். ஆனால் அதில் நாம் யாரும் சோடியம் பென்சவெயிட், பொட்டாசியம் நைட்ரேட் போட மாட்டோம்.
அதேபோல் மோனோ சோடியம் புலுட்மைன் போட்டு யாரும் பரிமாறுவதில்லை. ஆனால் கடைசிகளில், மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய, அத்தனை திண்பண்டங்கள் மற்றும் நொறுக்கு தீணிகளிலும் இந்த பொருட்கள் கலக்கப்படுகின்றன. தேவையற்ற ரசாணயங்கள் கலந்திருக்கும். இந்த ரசாயணங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான உணவை நாம் தினமும் சாப்பிட வேண்டும். நமது குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
குப்பை உணவுகளாக இருக்கும் பீட்சா, பர்கர், சவர்மா போன்ற உணவுகள் வேக வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து வெளியில் வந்து நம் ஆரோக்கிய உணவுகளுடன் நாம் நிற்க வேண்டும். இது சாய்ஸ் இல்ல. கட்டாயம். இனிமேல் இதை தவிர்க்க முடியாது என்று சொல்லக்கூடிய உணவுகளை எடுத்தால் மட்டும் தான், நாளைய எதிர்காலத்தை வருங்காலத்தை ஆரோக்கியமான ஒரு சமுதாயமாக மாற்ற முடியும்.
புற்றுநோயும், சர்க்கரை நோயும் அதிகரித்து வரும் இந்த காலத்தில், நாள்தோறும் நம் அடுப்படியில் கூடுதலாக 20 நிமிடம் செலவிட்டு, கரிசனத்தோடு உங்கள் உணவுகளை தயார் செய்யுங்கள் உங்கள் ஆயுளில் 20 ஆண்டுகளை கூட்டுங்கள் என்று கூறியுள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.