/indian-express-tamil/media/media_files/2025/04/30/fhvbkgI0atUtADLHpuBI.jpg)
முருங்கைக் கீரை, நம் நாட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஓர் அற்புத மூலிகை. இதில் உள்ள சத்துக்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டை விட பல்லாயிரம் மடங்கு அதிக சத்துக்களைக் கொண்டது முருங்கைக் கீரை. இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் இன்னும் சிறந்தது. முருங்கைக் கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சேர்த்து, நன்கு வேகவைத்து சூப் தயாரித்து, காலை உணவின் போது குடிக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக் கீரை சூப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். முருங்கைக் கீரைக்கு இணையாக வேறு எந்தக் காய்கறியையும் கூற முடியாது. அந்த அளவிற்குச் சிறப்பான ஒரு கீரை முருங்கைக்கீரை. என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். இந்த முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பல் (நசுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2-3 கப்
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்து சீரகம் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்போது நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, ஆறியதும் சூப்பை வடிகட்டி பரிமாறவும். இந்த சூப் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். தினமும் இதை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.