கோடை காலம் வந்துவிட்டால் போதும் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் சூடு.இதனை தடுக்கவும், இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பலரும் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். மேலும் உடல் சூட்டை குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வலைதளங்களில் தேட தொடங்குவார்கள். அதே சமயம், உடல் சூடு காரணமாக அவர்கள பலவிதமாக பாதிப்புகளையும் சந்திப்பார்கள்.
Advertisment
இந்த உடல் சூடு பிரச்னையில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து, டாக்டர் சாந்தி கூறியுள்ளார். உணவில் ஜவ்வரிசி கஞ்சி சேர்த்து குடித்தால், உடல் சூடு தனியும். இந்த ஜவவரிசி பொதுவாக குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும், ஒரு ஹைட்ரேஷனை ரீடெய்ன் பண்ணக்கூடிய ஒரு அருமையான உணவு. இந்த ஜவ்வரிசி கஞ்சி சாப்பிடுவதால், உடலில் நீர்த்தன்மையை பத்திரமாக பாதுகாக்கும். அதனால் டீஹைட்ரேஷன் அவ்வளவு சீக்கிரமாக தாக்காது.
எனக்கு சுகர் இருக்கிறது. அதனால் ஜவ்வரிசி சாப்பிடலாமா என்று கேட்டால், நீங்கள் ஜவ்வரிசி சாப்பிட கூடாது. அதற்கு பதிலாக சர்க்கரை நோயாளிகள் பாசிப்பருப்பு கஞ்சி வைத்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு கஞ்சி உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். அதே சமயம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. உடலில் சுகர் இல்லாதவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றாலும் வெளியில் தாக்கம் இருக்காது.
ஜவ்வரிசியை வாங்கி 5-6 முறை நன்றாக கழுவிவிட்டு, ஜவ்வரிசி மூழ்கும் வகையில் தண்ணீர் ஊற்றி, 2-3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, ஜவ்வரிசியை அமுக்கனால் அது நன்றாக அமுங்க வேண்டும். அதுதான் பதம். அதன்பிறகு, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, அது டிரான்ஸ்பிரண்ட் ஆகும் வரை கிண்டவும். அதன்பிறகு, இதில வடித்த கஞ்சியை சேர்த்து வீட்டில் வயதானவர்களுக்கு கொடுக்கலாம். எனர்ஜியை அதிகரிக்கும் இந்த கஞ்சி.
Advertisment
Advertisements
சின்ன குழந்தைகளுக்கு, இதே மாதிரி ஜவ்வரிசி கஞ்சி செய்து, அதில் பால், சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். இதில் பெரியவர்களாக இருப்பவர்களுக்கு, சர்க்கரை தேவையில்லை என்றால், அதில் மோர் கலக்கி கொடுக்கலாம். இந்த ஜவ்வரிசி கஞ்சி குடிப்பது, காலையில் உணவு அல்லது இரவு உணவுக்கு மாற்றாக இருக்கலாம். நல்ல நீர் காய் பொரியலுடன் சேர்த்து ஜவ்வரிசி கஞ்சி குடித்தால், நைட் ஏசி பேன் இல்லாமல் நன்றாக தூக்கம் வரும் என்று, கூறியுள்ளார்.