குடலை சுத்தம் செய்யும் 3 விதைகள்… முகம் பளபளப்பாக இப்படி செய்து குடிங்க; டாக்டர் ஜெயரூபா
குடல் ஆரேக்கியமாக இருந்தால், முகம் பளபளப்பாக இருக்கும். இந்த குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
குடல் ஆரேக்கியமாக இருந்தால், முகம் பளபளப்பாக இருக்கும். இந்த குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் உடலை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவது, மிகவும் இயற்கையானது மற்றும் பொதுவானது. மற்றவர்கள் முன்னிலையில் நாம் அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்பது பொதுவான ஒரு விஷயம் தான். ஒருவரின் முகம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
Advertisment
அதேபோல் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள, பல சன்ஸ்கிஜரீன்ஸ், பேஸ்பேக்களை பயன்படுத்துவார்கள். மேலும், சரியான சரும பராமரிப்பு முறையில் சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல் மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்தல் ஆகியவை அடங்கும். மேலும், சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், உணவுமுறைகளிலும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள உதவும் பொருட்களை சாப்பிடுவார்கள்.
ஆனாலும், முகம் பளபளப்பாக இருக்க குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. குடல் ஆரேக்கியமாக இருந்தால், முகம் பளபளப்பாக இருக்கும். இந்த குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். முகம் பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் இருப்பதற்கும், முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருப்பதற்கு, சீரகம், வெந்தயம், தனியா ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், முகம் பளபளப்பாக மாறும்.
இந்த தண்ணீர் குடலை சுத்தம் செய்யயும். குடல் சுத்தமாக இருந்தால், நமது முகமும் பளபளப்பாக இருக்கும். சீரகம், தனியா, வெந்தயம் ஆகியவற்றை இரவே ஊறவைத்துவிட்டு, காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இப்படி செய்யும்போது, குடலை சுத்தம் செய்யும். அதேபோல் முகத்தில் பருக்கள் உண்டாவது செரிமான கோளாறுகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஹார்மோன் தொடர்பான பிரச்னை இருந்தாலும் முகப்பரு வரும்.
Advertisment
Advertisements
இந்த மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள், வெந்தயம், சீரகம், தனியா தண்ணீரை குடிக்க வேண்டும். வெந்தயத்தில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இது மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும். சீரகம் குடலில் இருக்கும் செரிமான பாக்டீரியாவை அதிகப்படுத்தும். கொத்தமல்லி, நமது உடலில் தைராய்டு மற்றும் பி.சி.ஒ.டி தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் என்று டாக்டர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்