கேன்சர் வராமல் தடுக்கும்... இந்த 5 உணவை இப்படி எடுத்துக்கோங்க: டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன்

மஞ்சளில் இருக்கும் ஆண்டிக் ஆஸிட் நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதனால் உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவில் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.

மஞ்சளில் இருக்கும் ஆண்டிக் ஆஸிட் நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதனால் உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவில் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.

author-image
WebDesk
New Update
cancer

உடலில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த அசாதாரண உயிரணுக்கள் கட்டிகளை உருவாக்கலாம் அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவலாம். இந்த புற்றுயோந், தோல் அல்லது உறுப்புகளின் புறணியில் உருவாகும் புற்றுநோய், எலும்பு, தசை அல்லது இணைப்பு திசுக்களில் உருவாகும் புற்றுநோய். இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உருவாகும் புற்றுநோய் என பல வகைகள் உள்ளது.

Advertisment

காரணமின்றி எடை குறைதல், காய்ச்சல் ,சோர்வு ,தோலில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் கட்டி அல்லது வீக்கம், தொடர்ச்சியான வலி, சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள் , நீண்டகால இருமல் அல்லது குரல் கரகரப்பு உள்ளிட்ட பல அறிகுறிகள் இருக்கும். புகையிலை பயனபடுத்துவது, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், வைரஸ் தொற்றுகள், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் குறித்து டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் கூறியுள்ளார்.

புற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்கு, சிலவகை மருத்துவ முறைகள் உள்ளன. ஆனால் இது அனைத்துவகையான புற்றுநோய்க்கும் பொருந்தாது. புற்றுநோயின் வீரியத்தை பொருத்து மருத்துவ முறைகள் மாறுபடும். ஆனால் இந்த உணவுமுறைகளை கேன்சர் வராமல் தடுக்க அதிகம் பயன்படுத்தலாம். இந்த உணவுமுறையில் முதலில் பயன்படுத்துவது மஞ்சள். மஞ்சளில் இருக்கும் ஆண்டிக் ஆஸிட் நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதனால் உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவில் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.

அடுத்து கருஞ்சீரகம். மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் திறன் கொண்டது கருஞ்சீரகம். இதனை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சமமாக உணவில் சேர்த்தக்கொள்வது நல்லது. அடுத்து முள் சீதாப்பழம். இந்த பழத்தை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கேன்சர் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் இந்த பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கேன்சர் வராமல் தடுக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

அடுத்தது வெண்பூசணிக்காய். இதில் ஆக்டிக் ஆஸிட் அதிகம் உள்ளது. தினமும காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிடலாம். பூசணிக்காயை மஞ்சள் உப்பு சேர்த்து சுத்தம் செய்துவிட்டு, பீஸ் பீஸாக வெட்டி, தோல் மற்றும் விதையை நீக்காமல் சாப்பிட வேண்டும். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் அதில் மிளகு தூள் வெற்றிலை கூட சேர்த்துக்கொள்ளலாம். வயிற்றுப்பிரச்னையை தீர்க்கும் அருமருந்து வெண்பூசணிக்காய் என்று கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: