சளியைக் கரைத்து வெளியே தள்ளும் மருந்து... இந்த இலையில் இப்படி அடை தட்டிக் குடுத்துப் பாருங்க!
பெரும்பாலும் மழை மற்றும் குளிர் காலங்களில் தான் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். குளிர் காலநிலையில் மக்கள் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி பரவுவது எளிதாகிறது.
பெரும்பாலும் மழை மற்றும் குளிர் காலங்களில் தான் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். குளிர் காலநிலையில் மக்கள் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி பரவுவது எளிதாகிறது.
வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்று நோய் சளி. இது பொதுவாக மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கிறது. சளி பிடித்த ஒருவரை தொடுவதன் மூலம் அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை (உதாரணமாக, கைக்குட்டை, கதவு கைப்பிடி) தொட்டுவிட்டு உங்கள் மூக்கு, வாய் அல்லது கண்களை தொடுவதன் மூலம் சளி பரவலாம். சளி பிடித்த ஒருவர் இருமும்போது அல்லது தும்மும்போது காற்றில் சளி பரவலாம்.
Advertisment
பெரும்பாலும் மழை மற்றும் குளிர் காலங்களில் தான் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். குளிர் காலநிலையில் மக்கள் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி பரவுவது எளிதாகிறது. சளி, இருமல், தலைபாரம், மூக்கடைப்பு, இவை அனைத்தும் இருக்கும். குறிப்பாக நெஞ்சில் சளி அதிகமாக சேரும்போது வீசிங் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. நெஞ்சில் படிந்திருக்கும் சளியை வெளியே தள்ளக்கூடிய ஒரு கீரை சித்த மருத்துவத்தில் இருக்கிறது,
கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என்று சொல்லக்கூடிய இந்த கீரை தான் நெஞ்சு சளியை போக்கும் திறன் கொண்டது, இந்த கல்யாண முருங்கை இலையை பறித்து அதில் இருக்கும நரம்புகளை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு இவற்றை சேர்த்து, அரிசிமாவுடன் பிசைத்து அடையாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது சளி வராமல் தடுக்கக்கூடிய மருந்தாலும், சளியை கரைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
Advertisment
Advertisements
வரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே, சளி வராமல் தடுக்கும். ஏற்கனவே இருக்கக்கூடிய நெஞ்சு சளியை நீர்மப்படுத்தி வெளியில் தள்ளும் திறன் கொண்டது.