/indian-express-tamil/media/media_files/2025/03/12/S5qdTCItw067NkEqugAY.jpg)
மலம் கழிப்பதில் சிரமம் அல்லது மலம் கழிக்கும் எண்ணிக்கை குறைதல் மலச்சிக்கல் பிரச்னையாக கூறப்படுகிறது. பொதுவாக, ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கலாகக் கருதப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கு, இயற்கையில் பல தீர்கள் உள்ளன.
இது குறித்து டாக்டர் ஸகுல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், காலை எழுந்தவுடன், மலம் கழிக்கவில்லை என்றால், அன்றைய தினம் முழுவதும் ஏதே குறைபாடு இருப்பது போன்ற உணவுவே இருக்கும். இந்த பிரச்னை குணமாக முக்கிய 7 வழிகள் குறித்து பார்ப்போம். இந்த மலச்சிக்கல் தீர வேண்டும் என்றால் முதலில் செய்ய வேண்டியது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெருங்குடலில் உறிஞ்சப்படும்.
இதன் காரணமாக மலத்தில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்து இருகி கட்டியாகிவிடும். இதனால் மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10-12 க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதேபோல் நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் இருந்தால் தான் குடலின் செயல் சீராக இருக்கும். பெருங்குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
பச்சை காய்கறிகள், கீரைகள் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் காலை எழுந்தவுடன், 2 க்ளாஸ் வெந்நீர் குடித்துவிட்டு கொஞ்சம் நடந்தால், மலச்சிக்கல் பிரச்னை தீரும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.