கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேரும் சேர்வதால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கல்லீரல் கொழுப்பு நோய் என்று சொல்வார்கள். கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருப்பது இயல்பானது, ஆனால் கல்லீரலின் எடையில் 5% க்கும் அதிகமான கொழுப்பு இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் எனக் கருதப்படுகிறது. மது அருந்துவதால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் ஆகும். இந்த வகை உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.
Advertisment
இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்தல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், அதிகப்படியான மது அருந்துவது ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முக்கிய காரணம், உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் கொழுப்பு உருவாக வாய்ப்புள்ளது. இந்த கல்லீரல் கொழுப்பு பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு, கருஞ்சீரகம் முக்கிய நன்மைகளை கொடுக்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
கருஞ்சீரகம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தில் உள்ள "தைமோகுயினன்" போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் அல்லது தடுக்கவும் உதவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, இதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆஸ்துமா, சளி, இருமல் மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது, குறிப்பாக கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இது உதவும்.
Advertisment
Advertisements
அதேபோல் கல்லீரல் கொழுப்பு பாதிப்புக்கு கருஞ்சீரகம் தீர்வு தரும். உடலில் எங்காவது கொழுப்புகள் இருந்தால், அதை சரி செய்வதற்கு கருஞ்சீரகம் உதவும். அதேபோல் கல்லீரலை பாதுகாக்க கருஞ்சீரகம் உதவும். தினமும் தூதுவளை கருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து ஜூன் மாதிரி 30 எம்.எல். குடித்து வந்தால், பித்தப்பை கற்கள் குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்லீரல் மேல் படிந்துள்ள கொழுப்புகள் கரைவதற்கும் பயன்படுகிறது.
அதேபோல் கல்லீரலில் கற்கள் இருக்கிறது என்றால் இதனை கரைப்பதற்கு, தினமும் உணவில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும். நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து சாறு எடுத்து குடிக்க வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.