/indian-express-tamil/media/media_files/2025/02/25/x33YOv6Tdg2kZUQ3ltFq.jpg)
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலையை, ஈரல் கொழுப்பு அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver Disease) என்று சொல்வார்கள். கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருப்பது இயல்பானது, ஆனால் அதன் எடைக்கு மேல் 5% முதல் 10% வரை அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் அது கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது மது அருந்தாத அல்லது மிகக் குறைவாக மது அருந்துபவர்களிடம் காணப்படுகிறது.
இந்த கல்லீரல் கொழுப்பு நோயை 2 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: கல்லீரலில் கொழுப்பு மட்டுமே இருக்கும், வீக்கம் அல்லது கல்லீரல் சேதம் இருக்காது. இது பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், கல்லீரலில் கொழுப்போடு வீக்கமும், கல்லீரல் செல்களுக்கு சேதமும் ஏற்படும். இது கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் கல்லீரல் சுருக்கம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது.
இது ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற கடுமையான நிலைகளுக்கு முன்னேறலாம். இந்த கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து விடுபடுவதற்கும், வராமல் தடுப்பதற்கும், என்ன தீர்வு என்பது குறித்து, டாக்டர் சொக்கலிங்கம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்கிறது என்றால், அவர்கள் இந்த 3 மந்திரத்தை கடைபிடிக்க வேண்டும். உணவு, உணர்வு, உடற்பயிற்சி இவை மூன்றும் முக்கியமானது.
மனம் மகிழ்ச்சியாக இருந்தால் நல்ல ஹார்மோன்கள் சுரப்பது, உணவில், கொழுப்பு சேர்க்காமல் இருப்பது, எந்த உணவை சாப்பிட்டாலும் ஜீரனம் ஆண வேண்டும். அதனபிறகுதான் அடுத்த உணவை சாப்பிட வேண்டும். அடுத்து உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய செய்ய, கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்புகள் தானாக குறையும். 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இப்படி செய்யும்போது கொழுப்புகள் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.