கல்லீரலில் அதிகமாக கொழுப்பு படிந்த நிலையை கல்லீரல் கொழுப்பு நோய் என்று சொல்வார்கள். இந்த நோயை குணப்படுத்த கருஞ்சீரகம் முக்கிய மருந்தாக பயன்படும் என்று டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.
Advertisment
பல மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தில், நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் அடையாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறிக்கவும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். மேலும், இரத்த அழுத்தமும் குறையும். கருஞ்சீரக விதையை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் மேம்பட்ட, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.மேலும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் படிவுகளும் வெளியேறி, அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். அதேபோல், கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் ஈரலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை வழித்தெடுக்கும். சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் ஆஷா லெனின்.
Advertisment
Advertisements
மேலும் இந்த ட்ரிங்க் குடிப்பதன் மூலம், பி.சி.ஒ.டி, கருமுட்டை நீர்க்கட்டி, மாதவிடாய் தள்ளிப்போவது, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.