உடல் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் பெரிய பயனை கொடுக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இரத்த நாளங்களை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், கூந்தலை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றன.
Advertisment
நெல்லிக்காய் செரிமான அமிலங்களின் சுரப்பைத் தூண்டி, உணவு நன்றாக செரிமானம் அடைய உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்தவும், வயது தொடர்பான கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. இந்த நெல்லிக்காயை தேனில் கலந்து சாப்பிடுவது, உடலுக்கு அதிகபட்ச நன்மைகளை கொடுக்கும்.
இது குறித்து டாக்டர் அருண்குமார் கூறுகையில், தேன் நெல்லிக்காய் செய்யும்போது, நெல்லிக்காயை 20 நிமிடங்கள் வேக வைக்கிறார்கள். அதன்பிறகு அதில் சீரகத்தூள் சேர்த்து தேனில் கலந்து ஒரு ஜாடியில் போட்டு வெயிலில் காய வைத்துவிடுகிறார்கள். இந்த கலவை 5-7 நாட்கள் வெளியில் காய வேண்டும். இதைத்தான் தேன் நெல்லிக்காய் என்று சாப்பிடுகிறோம். 100 கிராம் நெல்லிக்காயில் 450 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இந்த தேன் நெல்லிக்காயை வைட்டமின் சி சத்துக்காக சாப்பிடுகிறோம் என்றால், இதை யோசிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
தேன் நெல்லிக்காய் தயாரிப்பாதற்காக நெல்லிக்காயை வேகவைக்கும்போது அதில் 75 சதவீதம் வைட்டமின் சி போய்விடும். பல ஆராய்ச்சிகளில் இது நிரூபனமாகிறது. அதேபோல் சூரிய ஒளியில் வைட்டமின் சி போய்விடும். தேன் நெல்லிக்காய்க்காக 5-7 நாட்கள் வரை நெல்லிக்காய் வெயிலில் காயவைக்கும்போது அதில் இருக்கும் வைட்டமின் சி முழுமையாக போய்விடும். வைட்டமின் சி-க்காக தேன் நெல்லிக்காய் சாப்பிடுகிறீர்கள் என்றால், இது தேவையில்லாதது என்று கூறியுள்ளார்.