நைட் கீரை சாப்பிடக் கூடாதா? டாக்டர் சொல்வது என்ன?

சத்துக்கள் நிறைந்த இந்த கடையல், சுடச்சுட சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!

சத்துக்கள் நிறைந்த இந்த கடையல், சுடச்சுட சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!

author-image
WebDesk
New Update
Arai keerai kadaiyal

அந்த காலக்கட்டத்தில் இரவில் கீரை சாப்பிட வேண்டாம் என்றும் முன்னோர்கள் சொன்னதில் எவ்வித அறிவியல் உண்மையும் இல்லை. இரவில் கீரைகளை பறிக்க சென்றால், தவறதலாக அருகில் விஷ செடி இருந்தால் அதையும் பறிந்து சாப்பிட்டுவிவோம். இதனால் உடல் பாதிப்பு, உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவ்வாறு சொல்லி இருக்கலாம். ஆனால். இரவில் கீரைகள் சாப்பிடுவத உடலுக்கு நல்லது என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.

Advertisment

அவசரமான நேரங்களில், ஆரோக்கியமான அதே சமயம் சுவையான ஒரு உணவைச் சமைக்க நினைத்தால், இந்த சிவப்பு தண்டு கீரை கடையல் சரியான தேர்வாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த இந்த கடையல், சுடச்சுட சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

சிவப்பு தண்டு கீரை - 2 கட்டு

சின்ன வெங்காயம் - 150 கிராம் 

தக்காளி - 1 பெரியது

பச்சை மிளகாய் - 5 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தண்ணீர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

பூண்டு - 5 பல் 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில், சிவப்பு தண்டு கீரையை சுத்தம் செய்து, நன்கு அலசி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், புளி, மற்றும் அலசிய கீரை ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி வையுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கீரை நன்கு வெந்து, மசியும் வரை வேகவிடுங்கள். கீரை நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது, வேகவைத்த கீரையை மத்து கொண்டு நன்கு கடைந்து எடுங்கள். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசித்துக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

ஒரு சிறிய வாணலியில், தாளிக்கக் கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விடுங்கள். பிறகு, வரமிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அதை கீரைக் கடையலில் கொட்டுங்கள். சுவையான மற்றும் சத்தான சிவப்பு தண்டு கீரை கடையல் இப்போது பரிமாறத் தயார்!

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: