யூரின் போகும் போது எரிச்சல்? சப்ஜா விதைகளை ஊற வைத்து; தினமும் இப்படி குடித்துப் பாருங்க: டாக்டர் ராஜலட்சுமி
சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப்பாதையில் கற்கள் இருந்தால், அவை எரிச்சலை ஏற்படுத்தலாம். அத்துடன், கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப்பாதையில் கற்கள் இருந்தால், அவை எரிச்சலை ஏற்படுத்தலாம். அத்துடன், கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது அனைவரும் சந்திக்கும் பொதுவான பாதிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதை வழியாக நுழைந்து, சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீரகத்தைப் பாதிக்கலாம். இதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் கழிக்க அவசரம், அடிவயிற்றில் வலி மற்றும் சில சமயங்களில் காய்ச்சல் ஏற்படலாம்.
Advertisment
சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப்பாதையில் கற்கள் இருந்தால், அவை எரிச்சலை ஏற்படுத்தலாம். அத்துடன், கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். இவ்வாறு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலுக்கு சப்ஜா விதைகள் தீர்வு தரும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
திருநீற்றுப்பச்சிலை அல்லது துளசி செடியின் விதைகள் தான் சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் பார்க்கும்போது பார்ப்பதற்கு எள் அல்லது கருஞ்சீரகத்தைப் போல சிறியதாகவும், கருமை நிறத்திலும் இருக்கும். இந்த விதைகள் தண்ணீரில் ஊறவைக்கும்போது, தண்ணீரை உறிஞ்சி, மென்மையான, வழவழப்பான ஜெல் போன்ற ஒரு பொருளாக மாறும். இதன் காரணமாக, இவை பெரும்பாலும் சர்பத்கள், ஃபாலூடா, மில்க் ஷேக்குகள் போன்ற குளிர் பானங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சப்ஜா விதைகள், உடலுக்குக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டவை. குறிப்பாக கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது. சப்ஜா விதைகளில் உள்ள நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், எடை குறைப்புக்கு உதவுகிறது.
Advertisment
Advertisements
சர்க்கரை நோயாளிகள் சப்ஜா விதைகளை உட்கொள்ளும்போது, இது இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இந்த சப்ஜா விதைகள், இனிப்பு தர்ப்பம் இனிப்பு வகைகள் கொண்டது. இது குளிர்ச்சியை கொடுக்கும். தொற்றுகளை குறைக்கும். சிறுநீர் கழிக்கும்போது, எரிச்சல், அல்சர் நோயாளிகள் என பலருக்கும் நன்மைகளை கொடுக்கும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.