நம்ம நாட்டில் விளையக்கூடிய இந்தக் கீரை கேரட்டைவிட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது தரக்கூடிய சத்துக்கள் கொண்டது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அதனால், இந்தக் கீரையில் இப்படி சூப் செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Advertisment
முருங்கைக் கீரையை நன்றாக ஒரு சூப் மாதிரி போட்டு சாப்பிடலாம், முருங்கை கீரையை தண்ணீரோடு வேக வைத்து, அதில், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, எல்லாம் சேர்த்து போட்டு அந்த சூப்பை காலை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால், நிறைய பேருக்கு ரத்தக் கொதிப்பு குறையும். முருங்கைக் கீரை சூப்பை ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டும். முருங்கைக் கீரைக்கு இணையான ஒரு விலை உயர்ந்த காயைக் கூட நாம் தேட முடியாது. அவ்வளவு சிறப்பான கீரை முருங்கை கீரை.
மேலும் கண்களுக்கு சத்துக்கள் தேவை என்றால் பீட்டா கரோட்டின் என்ற சத்து தான் தேவை. இதில் கரோட்டின் என்பது 80000 முதல் 90000 வரை தேவைப்படும் என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு முருங்கை கீரையில் மட்டும் தான் இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த முருங்கை கீரையை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு, அடுப்பில், பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கடாயில் வேகவைத்து, அதன்பிறகு அதில், முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில், எண்ணெய் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேகவைத்த கீரையில் கொட்டினால் சுவையான முருங்கை கீரை தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.