ஆண்களுக்கு குதிரை பலம் தரும் இந்த இயற்கை வயாகரா... இப்படி ரெடி செய்து சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் முதல், தூக்கமின்மை, உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அஸ்வகந்தா மிகச்சிறந்த நிவாரணம் தரும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் முதல், தூக்கமின்மை, உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அஸ்வகந்தா மிகச்சிறந்த நிவாரணம் தரும்.

author-image
WebDesk
New Update
ayurveda sexual health

தாம்பத்திய உறவில் வெகுநேரம் ஈடுபட வேண்டும் என்பது இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. இதற்காக வயாகரா போன்ற பொருட்களை தேடி செல்வது, இது குறித்து இணையத்தில் தேடுவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த மாதிரியான இளைஞர்களுக்கு குட் நியூஸ் செல்லும் வகையில் இயற்கையில் கிடைக்கும் வயாகரா பொருள் ஒன்றை டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Advertisment

தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, கைப்பழக்கம் இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா? என்பது குறித்து சந்தேகங்கள் அதிகம் இருக்கிறது.

அதேபோல், திருமணமானவர்கள், எவ்வளவு தான் தாம்பத்தியம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக செயல்பட வயகரா இருக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பலரும் தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர். அந்த வகையில் வயாகரா மாதிரியான ஒரு பொருள் தேடுபவர்களுக்கு டாக்டர் நித்யா கொடுக்கும் இயற்கை வயாகரா டிப்ஸ் அஸ்வகந்தா.

அஸ்வம் என்றால் குதிரை, கந்தம் எனறால் கிழங்கு. இதனை அமுக்கிரா கிழங்கு என்று கூட சொல்வார்கள். இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் முதல், தூக்கமின்மை, உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அஸ்வகந்தா மிகச்சிறந்த நிவாரணம் தரும். குறிப்பாக ஆண்களுக்கு, விந்து முந்துதல், விந்தணு எண்ணிக்கை குறைவு, பிரச்னைகளுக்கு இந்த அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம். ஒரு கிழங்கை எடுத்து பவுடராக தயார் செய்து நமக்கு கொடுக்கிறார்கள்.

Advertisment
Advertisements

இந்த அமுக்கிரா கிழங்கு புற்றுநோய் செல்களை தடுக்கும். உடலில் நரம்புகளை வலுவாக்கவும், இயற்கையாக தூக்கம் வருவதற்கும், அஸ்வகந்தா ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தான் அஸ்வகந்தா பொடி. அமுக்கிரா கிழங்கை பசும்பாலில் வேக வைத்து, பயன்படுத்த வேண்டும். தாம்பத்திய முறைக்காக இந்த அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்கிறோம் என்றால், பாலில் கலந்தே குடிக்கலாம் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: