இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் சின்ன வெங்காயம்… ஆனால் இப்படி தான் சாப்பிடணும்; டாக்டர் சிவராமன்
சின்ன வெங்காயத்தில் பயன் நமக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றால், அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது. வெங்காயத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்
சின்ன வெங்காயத்தில் பயன் நமக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றால், அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது. வெங்காயத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், உடலில் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்க உதவுகிறது. அந்த வகையில், சின்ன வெங்காயம் நமக்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது. இந்த வெங்காயத்தை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
சின்ன வெங்காயம், மிக சிறந்த ஃபீனால் கண்டெண்ட் அதிகம் உள்ள, பாலிஃபீனால்கள் அதிகம் உள்ள உடலுக்கு நன்மை அதிகம் தரக்கூடியது. இந்த சின்ன வெங்காயத்தில் சட்னி அரைத்து சாப்பிடலாம். இந்த சின்ன வெங்காயம்,ரத்தத்தில் உள்ள கொழுப்பையும், ரத்த குழாயின் உள்ளே உள்ள அடைப்புகளையும் நீக்கும் திறன் கொணடது. இந்த சின்ன வெங்காயத்தில் சட்னி அறைத்தால் அதிகமாக எண்ணெயில் வதக்கி அதன் நன்மைகள் அனைத்தையும் வீணடித்துவிடுவார்கள்.
சின்ன வெங்காயத்தில் பயன் நமக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றால், அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது. வெங்காயத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அதன் பச்சைத்தன்மையுடன் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும் அநத சுவையை நாம் பழக வேண்டும். நாக்குக்கு நல்லது என்று அதகமாக வதக்கி சாப்பிட கூடாது. வெங்காயத்தின் நல்ல குணங்கள் போகாபடி அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அதேபோல் குறைந்த அளவு காரம், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
வரமிளகாயயை வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், உப்பு, உரித்த சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அதனை நல்லெண்ணெயுடன் சேர்த்து தோசை இட்லி உள்ளிட்ட உணவுகளுக்கு தொட்டு சாப்பிடலாம். இந்த சின்ன வெங்காயத்தில், ஃபீனால் கண்டன்ட் அதிகம் உள்ள உணவுப்பொருள். இதில் பாலிஃபினால்ஸ்சும் அதிகம் உள்ளது. இவை இரண்டுமே உடலுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது. இந்த சின்ன வெங்காயத்தில் சட்னி அறைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.