இந்தியாவில் பல ஆண்கள் சிறுநீர் கழிக்கும்போது ஒருவிதமான திரவம் வெளியேறுவதை கவனித்திருக்கலாம். குறிப்பாக இந்திய வகை கழிப்பறைகளை பயன்படுத்தும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கலாம். இது உண்மையில் விந்தணு வெளியேற்றம் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இது புரோஸ்டேட் சுரப்பியிலிருந்து அழுத்தத்தின் காரணமாக வெளியேறும் திரவம் மட்டுமே. இதில் விந்தணுக்கள் இல்லை.
Advertisment
இந்த நிகழ்வு முற்றிலும் இயற்கையானது மற்றும் தீங்கு விளைவிக்காதது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையோ, பலத்தையோ அல்லது கருவுறுதல் திறனையோ எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவது உடலை பலவீனப்படுத்தும் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் போன்ற பல தவறான நம்பிக்கைகள் நம் சமூகத்தில் நிலவுகின்றன.
இந்த நம்பிக்கைகள் "தாத் சிண்ட்ரோம்" எனப்படும் ஒரு மனோவியல் நிலையுடன் தொடர்புடையது. இது விந்து இழப்பு பற்றிய கலாச்சார நம்பிக்கைகளிலிருந்து உருவாகிறது. இந்த மாதிரியான தவறான எண்ணங்களை விட்டுவிடுவது மிகவும் முக்கியம். சிறுநீர் கழிக்கும்போது வெளியேறும் திரவம் இயற்கையானது, கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டால், உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருப்பது நல்லது. இந்திய வகை கழிப்பறைகளில் ஏற்படும் அழுத்தம் சில நேரங்களில் இந்த உணர்வுக்கு காரணமாக இருக்கலாம். அதனால் மேற்கத்திய கழிப்பறையை பயன்படுத்தலாம். இருப்பினும், உங்களுக்கு தொடர்ந்து கவலை இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த தீர்வு.
Advertisment
Advertisements
இதற்கு சிகிச்சைகள் உள்ளன, மேலும் தவறான நம்பிக்கைகளை நம்ப வேண்டியதில்லை. "தாத் சிண்ட்ரோம்" மற்றும் அது தொடர்பான நம்பிக்கைகள் தவறான புரிதல்களின் அடிப்படையில் உருவானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான தகவல்களுடனும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடனும் உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர் காமராஜ் கூறியுள்ளார்.