இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. அதிலும் சர்க்கரை நோயாளியாக இருந்தால் தங்கள் உடல் எடையை குறைக்க ரொம்பவே சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண்கள், பிரசவம் முடிந்ததும் தங்கள் உடலை சரியாக கவனிக்காத பட்சத்தில் அவர்களும், உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்னைகளில் சிக்கிக்கொள்வார்கள். இதனால் அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்யவே சிரமப்படுவார்கள்.
Advertisment
இந்த வகையில் உடல் எடையால் பாதிக்கப்பட்டு எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு டாக்டர் நித்யா டிப்ஸ் கொடுத்துள்ளார். ஒரு அளவுக்கு மேல் உடல் எடை குறையவில்லை என்றால், கல்லீரல் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் உடலில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கென்று சித்த மருத்துவத்தில் தீர்வுகள் இருகிறது. இதை ஃபாலோ பண்ணும்போது உல் எடை குறையும் என்று கூறியுள்ளார்.
இரவு நேரத்தில் சரியான தூக்கம் இருந்தால் மட்டும் தான், உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற முடியும். அதற்காக சரியான தூக்கம் அவசியம். அப்படி தூங்கினால் தான், உணவு சரியான முறையில் செரிமானம் ஆகி, உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். அடுத்து சிறுநீரகங்களில் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் கீழாநெல்லி கர்ப்பம் மருத்து தீர்வு தரும். கீழாநெல்லி பொடி 100 கிராம் எடுத்தால், சீரகம், மஞ்சள் 50 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த மூன்று பொடிகளையும் சேர்த்து கரிசலாங்கன்னி சாறு சேர்த்து, வெயிலில் காயவைத்து, மீண்டும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொண்டு, இந்த பொடியை தினமும் வெந்நீரில் காலை மாலை இருவேளை கலந்து குடித்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகள் உடனடியாக வெளியேறும் என்று கூறியுள்ளார்.