/indian-express-tamil/media/media_files/2024/10/25/Sy7KaFMcwvY9xdeRDU1b.jpg)
உடலில் நோய் தொற்று தாக்கம் ஏற்படும்போது நுரையீரல் அதிகம் பாதிக்கப்படும். இதனால் நுரையீரல் பாதுகாப்பு முக்கியமானது. குறிப்பாக கொரோனா போன்ற நோய் தாக்குதல் வரும் முதலில் நுரையீரல் தான் பாதிக்கப்படும். இதனால் நுரையீரல் பாதுகாப்புக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக முக்கியம். உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், சளித்தொல்லையை தடுக்கவும் தண்ணீர் உதவுகிறது. நிறைய தண்ணீர் குடிப்பது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். அதேபோல், இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இரவில் தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். இஞ்சியில் இருக்கும் வைட்டமின்கள், சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நன்மை செய்யும். இதை டீ, ஜூஸ் அல்லது உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் சுக்கு (காய்ந்த இஞ்சி) சுவாச மண்டலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். காலையில் தேனில் இஞ்சி, மதியம் நெய்யில் சுக்கு சாப்பிடுவது நல்லது.
மதியம் சாதம் சாப்பிடும்போது ஒரு சிட்டிகை சுக்கு, 2-3 துளி நெய் சேர்த்து சாப்பிடலாம். காலையில் ஏற்படும் பித்தத்தை தணிப்பதற்கு சுக்கு முக்கியமாக பயன்படுகிறது. வாயு தொல்லையில் இருந்து விடுபடவும் பயன்படுகிறது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.