ஊறுகாய், அப்பளம், கருவாடு... கிட்னி பிரச்சனை இருந்தா இத மட்டும் தொடாதீங்க: டாக்டர் பிரசன்னா
கிட்னியில் கல் இருந்தால், வலி அடிவயிறு மற்றும் இடுப்புக்கு பரவுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி. சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல் உள்ளிட்ட பல அறிகுறிகள் தெரியும்.
கிட்னியில் கல் இருந்தால், வலி அடிவயிறு மற்றும் இடுப்புக்கு பரவுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி. சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல் உள்ளிட்ட பல அறிகுறிகள் தெரியும்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சிறுநீரக கல். சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கடினமான, படிக கனிமப் பொருட்களாகும். இவை சிறு மணல் துகள்கள் முதல் பெரிய கோல்ஃப் பந்து வரை பல்வேறு அளவுகளில் இருக்கலாம். சீறுநீரகத்தில் கற்கல் வருவதற்கு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது மிகவும் பொதுவான காரணம். இதனால் சிறுநீரில் தாதுக்களின் அடர்த்தி அதிகரித்து கல் உருவாக வழிவகுக்கும்.
Advertisment
சிறுநீர் வெளியேறுவதில் ஏதேனும் தடைகள் அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள். சிறுநீரகக் கற்கள் சிறுநீரகத்தில் இருக்கும் வரை பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அது சிறுநீர் குழாய்க்குள் நகரும்போது கடுமையான வலியை உண்டாக்கும். விலா எலும்புகளுக்குக் கீழே, இருபுறமும் முதுகிலும் கடுமையான வலி. வலி அடிவயிறு மற்றும் இடுப்புக்கு பரவுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி. சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல் உள்ளிட்ட பல அறிகுறிகள் தெரியும்.
இந்த பிரச்னையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, டாக்டர் பிரசன்னா கூறியுள்ளார். சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க, சில உணவு முறை மாற்றங்களை செய்யலாம். சிக்கன் மட்டன், மீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது குறைக்க வேண்டும். இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. அதேபோல் உப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ள பொருடகளான, ஊறுகாய் அப்பளம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும் அதை தவிர்க்க வேண்டும்..
Advertisment
Advertisements
சாக்லேட்ஸ் மற்றும் கீரை வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். எந்த மாதிரி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், கீரைக்கு இணையான உணவாக பிராக்கோலியை எடுத்துக்கொள்ளலாம். மக்காச்சோளம், பிஸ்தா உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல் பதாம், நட்ஸ், தவிர்த்துவிட்டு அதற்கு நிகரான வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.