ஷார்ப் பார்வைக்கு இந்தக் கீரை... இப்படி கடையல் செஞ்சா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

கண் எரிச்சல், மங்குதல், கண் வலி, மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

கண் எரிச்சல், மங்குதல், கண் வலி, மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
ponnanganni keerai

கீரைகள் என்றாலே நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். பலவையாக கீரைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் வித்தியாசமாக பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த பொன்னாங்கன்னி கீரையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை வைத்து ஒரு சிறப்பான கீரைக்கூட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

Advertisment

பொன்னாங்கன்னி நாட்டு பொன்னாங்கன்னி மற்றும் சீமை பொன்னாங்கன்னி என இரு வகைகள் உள்ளது. இதில் நாட்டு பொன்னாங்கன்னி,  பொதுவாக பச்சை நிற இலைகளைக் கொண்டது. இதில் தான் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  சீமை பொன்னாங்கண்ணி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற இலைகளைக் கொண்டது. இது பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது, மருத்துவ குணம் சற்றுக் குறைவு என்று கூறப்படுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த கீரையின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று கண் பார்வை மேம்படுத்தும். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இது கண் எரிச்சல், மங்குதல், கண் வலி, மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. தொடர்ந்து 27 நாட்கள் இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கீரையை வைத்து கூட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

நாட்டு பொன்னாங்கன்னி கீரை – ஒரு கட்டு

வரமிளகாய் – 2

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் – 3 பீஸ்

பாசி பருப்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 1

பூண்டு – 10 பல்

செய்முறை

முதலில் பாசிப்பருப்பு, தக்காளி, வெங்காயம், மஞ்சள் தூள் பூண்டு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய், வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

குக்கரில் வைத்த பருப்பு வெந்தவுடன், அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, நறுக்கி சுத்தமாக வைத்துள்ள பொன்னாங்கன்னி கீரையை அதில் சேர்க்கவும். கீரை நன்றாக வெந்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை சேர்க்கவும்.

இறுதியாக கொதிக்க வைத்து, ஒரு குழி கரண்டியில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான பொன்னாங்கன்னி கீரை கூட்டு தயார். 

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: