நரம்பு சுருட்டல் நோய்? நைட் தூங்கும் முன் இத ஊற வச்சு; 15 நாள் காலை வெறும் வயிற்றில் குடித்துப் பாருங்க!
நரம்புகளில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் இரத்தம் தேங்கி நரம்புகள் விரிவடைகின்றன. உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
நரம்புகளில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் இரத்தம் தேங்கி நரம்புகள் விரிவடைகின்றன. உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
கால்களில் உள்ள நரம்புகள் வீங்கி, புடைத்து, நீல அல்லது ஊதா நிறத்தில் தோன்றுவதைக் வெரிகோஸ் வெயின் என்று சொல்வார்கள். நரம்புகளில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் இரத்தம் தேங்கி நரம்புகள் விரிவடைகின்றன. உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
Advertisment
கால்களில் நீல அல்லது ஊதா நிறத்தில் தெரியும் வீங்கிய, முறுக்கப்பட்ட நரம்புகள், கால்களில் வலி அல்லது பாரமான உணர்வு, கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம், கால்களில் அரிப்பு, கால்களில் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல அறிகுறிகள் உள்ளன. கால்களில் வீக்கம் வலி அல்லது பாரமான உணர்வு, தோலில் நிறமாற்றம் (பொதுவாக கணுக்கால் அருகே), தோலில் அரிப்பு , காரணமின்றி இரத்தம் கசிதல், இரவு நேரங்களில் கால் பிடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகள் மூலம் இந்த பாதிப்பை தெரிந்துகொள்ளலாம்.
இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் இரத்தம் இதயத்திற்குத் திரும்புவதை உறுதி செய்கின்றன. இந்த வால்வுகள் சரியாக வேலை செய்யாவிட்டால், இரத்தம் கால்களில் தேங்கி, நரம்புகள் வீங்கிவிடும். வயதாகும்போது நரம்புகளில் உள்ள வால்வுகள் பலவீனமடைகின்றன. நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்திருப்பதன் காரணமாகவும் இந்த வெரிக்கோஸ் நோய் ஏற்படலாம்.
Advertisment
Advertisements
இந்த பாதிப்பை தீர்ப்பதற்கு உலர் திராட்சை வைத்து செய்யப்படும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கருப்பு உலர் திராட்சையை 10-15 எடுத்துக்கொண்டு முந்தைய நாள் இரவில், ஊறவைத்துவிட வேண்டும். அதன்பிறகு அடுத்த நாள் காலையில், இதனை எடுத்து தண்ணீரை குடித்துவிட்டு, அந்த திராட்சையை விதையுடன் மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் தெரியவரும். இதனை சாப்பிட முடியவில்லை என்றால் அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் குடித்துவிடலாம்.