/indian-express-tamil/media/media_files/2025/05/21/JI0iuQyYCSFPn2z3Jj8w.jpg)
ஒரு சிலருக்கு காலை நேரத்தில் எழுந்தடன், குமட்டல் வாந்தி, நெஞ்சு பாரம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்பது குறித்து, டாக்டர் செங்கோட்டையன் ஜோன்ஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
பொதுவாக அல்சர் பிரச்னை இருப்பவர்கள் இந்த பிரச்னைகளை திகம் சந்திப்பார்கள். இந்த பிரச்னையை சந்திப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கிய வேலை என்னவென்றால் வயிறு முட்ட சாப்பிட கூடாது. எண்ணெயில் பொறித்த உணவுகள், புளிப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரமாண உணவுகளை ஓரளவுக்கு தவிர்க்க வேண்டும். அதேபோல் பால் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் புளிப்பு இருக்கக்கூடிய பிரெட், பேக்கிரி பொருட்கள், இட்லி தோசை, உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இட்லி தோசை சல்ல உணவு தான் என்றாலும், இந்த மாதிரி குமட்டல் வாந்தி இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு அல்ல. இந்த எதுக்களிப்பு, குமட்டல், வாந்தி பிரச்னை இருப்பவர்கள், மாதுளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தில் இருக்கும் மாதுளை மனப்பாகுவை வாங்கி சாப்பிடலாம்.
காலை மற்றும் இரவு அப்படியே அல்லது தண்ணீரிர் கலந்து எடுத்துக்கொள்ளலாம். வாந்தி குமட்டல் அதிகமாக இருந்தால் 3 வேளையும் இதனை எடுத்துக்கொள்ளலாம். கொத்தமல்லி விதையை வறுத்து அதில் கஷாயம் வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். 20 மில்லி வீதம், ஒரு நாளைக்கு 3-4 முறை எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் உங்கள் உடலில் உள்ள பித்த நிலையை மாற்றும். மாதக்கணக்கில் இதனை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இந்த மருத்துவ முறைகளை தொடர்ந்து செய்யும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனை தொடர்ந்து 30-40 நாட்கள் செய்யும்போது வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள உள் சூழல் மாறும். இவ்வாறு மாறும்போது வாமிட் வராது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.