Advertisment

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்... உடல் சோர்வே வராது: டாக்டர் அமுதா

உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.

author-image
WebDesk
New Update
உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.

உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், இதை சாப்பிடலாம் இதை முற்றிலும் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்று டாக்டர் அமுதா கூறியுள்ளார்.

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.

இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், ஆப்பிள் கூட உடல் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் முக்கிய உணவாக இருக்கிறது. நோயாளிகள் உடல் சோர்வை கட்டுக்குள் கொண்டுவர இது மிகவும் உதவும். அதனால் தினமு்ம் 2 நெல்லிக்காய் சாப்பிடுவர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதேபோல் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்களின் பட்டியலில் சீதா பழம் முதலிடத்தில் உ்ளளது.

Advertisment
Advertisement

அடுத்து 2-வது இடத்தில் கொய்ய பழம் உள்ளது. இதை பழங்களாக எடுக்காமல் காயாக சாப்பிட்டு வருவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். அடுத்து பப்பாளி பழம். இதில் இருக்கும் வைட்டமின் ஏ சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிய நன்மைகள் தரும். குறிப்பாக பழமாக இல்லாமல் காயாக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. இந்த 3 பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக சாப்பிடலாம்.

தினமும் காலை 2 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை நோய்கட்டப்படுத்தலாம். உடல் சோர்வே ஏற்படாது என்று டாக்டர் அமுதா கூறியுள்ளார். 

Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment