ரத்த சோகையை தடுக்கும் வல்லமை... இந்தக் கீரையில் கடையல்; சூப்பர் டேஸ்ட்!
குறிப்பாக, இரத்த சோகை நோயை தடுக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு இருக்கிறது. இது நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சுவையான அரைக்கீரை கடையலை எவ்வாறு தயாரிப்பது என்று காணலாம்.
குறிப்பாக, இரத்த சோகை நோயை தடுக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு இருக்கிறது. இது நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சுவையான அரைக்கீரை கடையலை எவ்வாறு தயாரிப்பது என்று காணலாம்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை அள்ளிக் கொடுக்கும் கீரை வகைகளில் அரைக்கீரைக்கு ஒரு தனி இடமுண்டு. குறிப்பாக, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அரைக்கீரை திகழ்கிறது. அதன்படி, சுவையான அரைக்கீரை கடையலை எவ்வாறு தயாரிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை, கடலை பருப்பு, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய்கள், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள்.
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இத்துடன் கடலை பருப்பு, மூன்று பச்சை மிளகாய்கள், நறுக்கிய தக்காளி, பொடியாக வெட்டிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைக்கீரை ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இது நன்றாக கொதித்ததும், கீரையை மசித்து விடலாம். இப்போது அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து அதில், சிறிது எண்ணெய், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய்கள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இதனை கீரை மசியலுடன் சேர்த்து கலக்கலாம்.
இவ்வாறு செய்தால் சுவையான அரைக்கீரை கடையல் தயாராகி விடும். குறிப்பாக, இரத்த சோகை நோயை தடுக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு இருக்கிறது. இது நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.