மலச்சிக்கல் பிரச்சனை என்பது நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்பட கூடிய ஒன்று. இன்றைய சூழலில் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் ஏற்படும் இதனை எப்படி இயற்கையான முறையில் வீட்டிலேயே சரிசெய்வது என்று காஸ்மோ ஹெல்த் அபிஷியல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மாயிலை - 2 நுனா இலை - 2 கொய்யா இலை - 2
ஒருவேளை நுனா இலை கிடைக்கவில்லை என்றால், கொய்யா இலை மற்றும் மாயிலை இரண்டையும் பயன்படுத்தலாம். மூன்று இலைகளும் கிடைத்தால் மிகவும் சிறந்தது.
Advertisment
Advertisements
செய்முறை
மேற்கண்ட இலைகளை எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த வடிகட்டிய நீரை காலையில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
இந்த மருந்தை குடித்த பிறகு, ஒரு மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல், கண்களை மூடி ரிலாக்ஸாக அமர்ந்திருக்க வேண்டும். இந்த மருந்து, வாட்டர் பாஸ்டிங் (water fasting) எப்படி வேலை செய்யுமோ அதைவிடப் பல மடங்கு சிறப்பாகச் செயல்படும். இதை தொடர்ந்து 27 நாட்கள் குடித்து வந்தால், உடல் கழிவுகள் முழுமையாக வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் கழிவுகள் என்பது சாப்பிட்டு வெளியேறுவது மட்டுமல்லாமல், உடலின் ஒன்பது துவாரங்கள் வழியாகவும் (காற்றாக, பேட் ஏரா, ஃபயர் பாயிண்டாக, எலும்புகளாக) வெவ்வேறு விதமாக வெளியேறும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.