விழுந்து எழுந்தவர்களுக்கு உளுந்தங்கஞ்சி என்ற ஒரு பழமொழி கூறுவார்கள். அவ்வளவு சத்து மிக்க உடலை வலிமையாக்கும் உளுந்தங்கஞ்சி எப்படி செய்வது என்று சிஸ்டர் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து பச்சரிசி உப்பு நாட்டுச்சர்க்கரை நெய் முந்திரி தேங்காய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் கருப்பு உளுந்து போட்டு வறுத்து ஆற வைக்கவும். பின்னர் அதில் பச்சரிசி போட்டு வறுத்து இரண்டையும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த பொடி தேவையான அளவு எடுத்த அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி விழாமல் கரைத்துக் கொள்ளவும் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். பின்னர் கொதிவரும் போது நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். நாட்டுச் சர்க்கரை சேர்த்தவுடன் பாத்திரம் அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டையில் நெய், முந்திரி பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து இந்த உளுந்தங்கஞ்சியில் சுவையான உளுந்து கஞ்சி ரெடி ஆகிவிடும். மிகவும் ருசியான இந்த உளுந்தங்கஞ்சியை சாப்பிடுவதன் மூலம் இடுப்பு எலும்பு பலமாகும். உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமும் கூட தரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.