பசியின்மை, செரிமான பிரச்சனை... அழகான இந்த மருந்தை ஒருமுறை சாப்பிடுங்க: டாக்டர் கௌதமன்
முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதன் மருத்துவ குணங்கள் குறித்து இந்தக் குறிப்பில் காணலாம்.
முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதன் மருத்துவ குணங்கள் குறித்து இந்தக் குறிப்பில் காணலாம்.
உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். குறிப்பாக, தாவர வகைகளில் இருந்து கிடைக்கும் எண்ணற்ற பொருட்களை எவ்வாறு மருந்தாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அந்த வகையில், முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை மருந்தாக உபயோகிக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முருங்கை பிசினுக்கு இணையான மருந்து வேறு எதுவும் கிடையாது என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார். சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை பிசினை மருந்தாக பயன்படுத்தலாம். அதன்படி, முருங்கை பிசினை நன்றாக காய வைத்து, சுத்தப்படுத்தி, பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்தால் சளி போன்ற பிரச்சனை சரியாகும் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
அன்டி ஆக்சிடன்ட் நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த வகையில் இந்த முருங்கை பிசினில் அன்டி ஆக்சிடன்ட் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இதனை தண்ணீர் மட்டுமின்றி தேன் மற்றும் நேய் போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.
மூட்டு வலிகள் போன்றவற்றையும் இது குறைக்க உதவுகிறது. உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றவும், உடலில் உள்ள அழற்ச்சியை போக்கவும் முருங்கை பிசினை பயன்படுத்தலாம். இது இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Advertisment
Advertisements
நாம் சாப்பிடும் சத்துகள் முழுமையாக உடலால் உறிந்து கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னர், அந்தக் கழிவுகள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட வேண்டும். இந்த நிகழ்வை தான் செரிமானம் என்று கூறுகிறோம். எனவே, செரிமானம் சீராக இருக்கும் போது நம் ஆயுளை நீட்டிக்க உதவும். அதன்படி, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் முருங்கை பிசின் மருந்துக்கு இருக்கிறது.
எனவே, பல நாட்களாக பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் முருங்கை பிசினை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார். இதற்காக ஒரு சிட்டிகை முருங்கை பிசினை தேனுடன் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பாக சாப்பிடலாம்.
நன்றி - Wellness Guruji - Mega Camps Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.