Advertisment

'நிறைவான நிர்வாகம்': பா.ஜ.க செயற்குழுவில் புதிய முழக்கம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பா.ஜ.க தேசிய செயற்குழுவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், ராமர் கோவில், நலத்திட்டங்கள் பற்றிய சமூக-பொருளாதாரத் தீர்மானத்தை முன்வைத்தார்

author-image
WebDesk
New Update
'நிறைவான நிர்வாகம்': பா.ஜ.க செயற்குழுவில் புதிய முழக்கம்

Liz Mathew

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள், நாட்டை "நிறைவான அரசியலுக்கும், நிறைவான ஆளுமைக்கும்" கொண்டு சென்றுள்ளதுடன், இந்திய நாட்டை "பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக" இருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதன் சமூக பொருளாதார தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கொண்டு வந்த தீர்மானம், மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் ஹரியானாவின் கட்சி எம்.பி சுனிதா துக்கல் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது, மோடியின் சாதனைகளையும் ஜி 20 தலைவர் பதவிக்காகவும் பாராட்டியது.

இதையும் படியுங்கள்: மோடி மீதான எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே பதில் – பா.ஜ.க தீர்மானம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான மோடியின் முயற்சிகளையும் தீர்மானம் பாராட்டியது. ”ராமர் கோயில் கட்டுவதற்கான கால அட்டவணையைக் கேட்டு பா.ஜ.க.,வை கேலி செய்ய எதிர்க்கட்சிகள் முயன்றன. இப்போது கோயில் கட்டப்பட்டு வருகிறது, இப்போது தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன, ”என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமூக பொருளாதார தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

ஏழைகளுக்கு இலவச ரேஷன், கசிவைத் தடுக்கும் வகையில், பயனாளிகளுக்கு ரூ. 22.6 லட்சம் கோடி நேரடிப் பலன் பரிமாற்றம், பிரதமரின் வீட்டுத் திட்டங்களுக்கான நிதி அதிகரிப்பு (ஒரு யூனிட்டுக்கு ரூ. 75,000-லிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது) உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை தர்மேந்திர பிரதான் பட்டியலிட்டார். "டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வேகமாக முன்னணியில் உள்ளது மற்றும் ஜோ 40/100 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கின்றன," என்று அவர் கூறினார்.

யூனிகார்ன்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் இந்திய இளைஞர்களை வேலை தேடுபவர்களில் இருந்து வேலை வழங்குபவர்களாக மாற்றியுள்ளன என்று தர்மேந்திர பிரதான் கூறினார். "அரசாங்கத்தின் முன்முயற்சிகள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியது மற்றும் அதை ஆத்மநிர்பர் (சுயசார்பு) ஆக்கியது மட்டுமல்லாமல், இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய விழிப்புணர்வும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

உலக ஜி.டி.பி.,யில் இந்தியாவின் பங்களிப்பு 2.6 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

பிரதானின் கூற்றுப்படி, மோடி அரசாங்கம் நாட்டை "நிறைவான அரசியல் மற்றும் நிறைவான நிர்வாகத்திற்கு" இட்டுச் சென்றுள்ளது, அதை விளக்கிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற வாக்குறுதியை, மதம் அல்லது ஜாதி அல்லது பிராந்தியம் பாராமல் ஒவ்வொரு சாமானிய குடிமகனுக்கும் அதன் திட்டங்களின் பலன்களை சென்றடைவதன் மூலம் அரசாங்கம் தனது வாக்குறுதியை நனவாக்கியுள்ளதாக கூறினார். “வியாவஸ்தா என்பது அனைவருக்கும் பொதுவானது. பிரமிட்டின் அடிப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு வாசலில் விநியோகத்தைப் பெறுகிறார்கள். அதைத்தான் நிறைவான ஆட்சி என்று நாங்கள் கருதுகிறோம்," என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment