Advertisment

தாமதமான முடிவுகள் கொரோனா பரவலை வேகப்படுத்தும் - அதிகாரிகள் அச்சம்

இந்த தாமதத்திற்கு அதிக மாதிரிகள் எடுக்கப்படுவதும், அதன் காரணமாக ஏற்படும் அதிக சுமையே என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தாமதமான முடிவுகள் கொரோனா பரவலை வேகப்படுத்தும் - அதிகாரிகள் அச்சம்

சென்னை மற்றும் கோயம்புத்தூரில், முடிவுகள் ஒப்பீட்டளவில் வேகமாக அறிவிக்கப்படுகின்றன

ஜூலை 4 ஆம் தேதி, திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தையில் 183 காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆறு நாட்களுக்குப் பிறகு, அதில் ஏழு பேருக்கு கோவிட் -19 இருந்தது கண்டறியப்பட்டது. இந்த 6 நாட்களில், ஏழு விற்பனையாளர்கள் தினமும் சந்தைக்கு வருகை தந்து, வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பேசியுள்ளனர், புழங்கியுள்ளனர். முடிவுகள் தெரிந்த பிறகே, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய தொடர்புகள் எவருக்கும் கோவிட் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிய, சுகாதார அதிகாரிகள் அவர்களில் யாரையும் சோதிக்கவில்லை.

முடிவுகள் வெளிவரும் வரை சோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்களை தனிமைப்படுத்திக் கொள்ள சரியான நடவடிக்கைகள் இல்லாத நிலையில், அவர்கள் வைரஸ் பரவுவதை மேலும் விரைவுபடுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.5 சதவீதத்திற்கு கீ்ழ் குறைந்தது – குஜராத், மகாராஷ்டிரா நிலை தான் மோசம்

பல கோவிட் பாஸிட்டிவ் நபர்கள் கூறுகையில், முடிவுகளைப் பெறுவதில் மூன்று நாட்கள் வரை தாமதம் இருப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் நேர்மறை சோதனை செய்த ஒருவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார். "சோதனை நடத்தப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகே எனக்கு கொரோனா உள்ளது என்பதை அறிவிக்க அதிகாரிகள் என்னை அழைத்தனர்." என்கிறார்.

இந்த தாமதத்திற்கு அதிக மாதிரிகள் எடுக்கப்படுவதும், அதன் காரணமாக ஏற்படும் அதிக சுமையே என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஜூன் மாதத்தில், மாநிலத்தில் 90 ஆய்வகங்கள் மட்டுமே மாதிரிகளை சோதிக்க அங்கீகாரம் பெற்றன. பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதும், சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருந்தது. கோவை போன்ற மாவட்டங்களில், மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதன் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3,200 ஆக அதிகரித்தன.

"இது ஒரு பெரிய பின்னடைவை உருவாக்கியது" என்று ஒரு சுகாதார அதிகாரி TOI செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“தற்போது, மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு, முடிவுகளைப் பெற சில நாட்கள் ஆகும். தனியார் ஆய்வகங்கள் நோயாளிகளுக்கு தகவல் தெரிவிக்க, சுகாதார அதிகாரிகளுக்கு முடிவுகளை அனுப்புகின்றன,” என்றார்.

திண்டுக்கல் அல்லது நமக்கல் போன்ற மாவட்டங்களில், போதுமான ஆய்வகங்கள் உள்ள கோவை போன்ற பிற மாவட்டங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. எனவே சோதனைகளுக்கான மாதிரிகளை கொண்டு செல்வதற்கும் நேரம் எடுக்கும். சென்னை மற்றும் கோயம்புத்தூரில், முடிவுகள் ஒப்பீட்டளவில் வேகமாக அறிவிக்கப்படுகின்றன.

மதுரை, 8,250 வழக்குகளைத் தாண்டினாலும், நான்கு ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன. மாவட்டத்தில் 4,000 மாதிரிகள் உள்ளன, அதற்கான முடிவுகள் வெளிவர காத்திருக்கின்றன. "இது மாவட்டத்தில் தினசரி மாதிரி சேகரிப்புக்கு சமம்" என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பி சந்திரமோகன் கூறினார். மேற்கோள் காட்டப்பட்ட தாமதத்திற்கு ஒரு காரணம், மாவட்டத்தின் சோதனை திறன் 2,500 பாதிப்புகள் வரை மட்டுமே. மீதமுள்ளவை மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

உலகின் பிரபலமான மூன்றாவது தலைவர் நரேந்திர மோடி; டிவிட்டரில் சாதனை

இப்போது, ​​சுகாதார அதிகாரிகள் முதலில் முதன்மை தொடர்புகளை சோதிப்பதில் கவனம் செலுத்துகின்றனர், இதனால் அதிக ஆபத்து உள்ள தொடர்புகளின் நிலையை அறிந்து தனிமைப்படுத்த முடியும்.

முடிவுகளை தாமதமாக அறிவிப்பதால் வேகமாக பரவுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். "ஒரே நாளில் முடிவுகளை அறிவிக்க வசதிகளை நாங்கள் அதிகரித்துள்ளோம்," என்று திருப்பூர் கலெக்டர் கே விஜயகார்த்திகேயன் TOI-யிடம் கூறினார். திருச்சியில், மேலும் நான்கு தனியார் ஆய்வகங்கள் திங்கள்கிழமை முதல் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்தத் தொடங்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநில சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், pooled testing நேரத்தை குறைக்கும். திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி மற்றும் சேலம்ஆகிய மாவட்டங்களில் pooled testing செய்யப்படும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment