New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/karti.jpg)
கார்த்தி சிதம்பரம் (ட்விட்டர்/ @கார்த்திபிசி)
கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையாச் சொத்து உட்பட, ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கம்
கார்த்தி சிதம்பரம் (ட்விட்டர்/ @கார்த்திபிசி)
ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் (ED) செவ்வாய்கிழமை முடக்கியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைக்கப்பட்ட நான்கு சொத்துக்களில் ஒன்று கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையாச் சொத்து என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: என்.சி.பி-யில் இருந்து அஜித் பவார் விலகல் குறித்து பேச்சு… உண்மை இல்லை – ஷரத் பவார்
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி. ஆவார், மேலும் ஐ.என்.எக்ஸ் வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ" பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆதாயம் தொடர்பான வழக்கு, அவரது தந்தை ப.சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB) அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.