/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-24-at-11.24.06-PM.jpeg)
ஜே.என்.யு வளாகத்தின் பிரதான வாயிலில் மாணவர்கள் போராட்டம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - அமித் மெஹ்ரா)
Vidheesha Kuntamalla
இரவு 8.30 மணிக்கு, அதாவது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர் சங்கம் இரண்டு பகுதிகளைக் கொண்ட பி.பி.சி ஆவணப்படமான 'இந்தியா: மோடி கேள்வி'யின் முதல் எபிசோடை திரையிடத் திட்டமிட்ட அரை மணி நேரத்திற்கு முன்பாக பல்கலைக்கழக வளாகம் இருளில் மூழ்கியது (மின்சாரம் நிறுத்தப்பட்டது). முன்னதாக மத்திய அரசு உத்தரவுப்படி யூடியூப் மற்றும் ட்விட்டர் தளத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட மின்தடை என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் குழு போராட்டம் நடத்தியதோடு, ஆவணப்படத்தின் முதல் பகுதியை தங்கள் தொலைபேசிகளிலும் மடிக்கணினிகளிலும் மாணவர்கள் பார்த்ததற்கு பின்னர், நள்ளிரவுக்குப் பிறகுதான் மின்சாரம் திரும்பி வந்தது.
இதையும் படியுங்கள்: ஹைதராபாத் பல்கலை.யில் பி.பி.சி- மோடி ஆவணப் படம்; ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவு புகார்
JNU துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் மற்றும் பல்கலைக்கழக தாளாளர் 1 சதீஷ் சந்த்ரா கர்கோடி கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை. துணைப் பதிவாளர் ரவி காந்த் சின்ஹா கருத்து தெரிவிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/jnubbc.jpeg)
"JNU துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரால் இது ஒரு பெரிய மின்வெட்டு, இது வளாகத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாதித்துள்ளது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே மின்சாரத்தை நிறுத்த எந்த முயற்சியும் இல்லை” என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்தில் இவ்வளவு நேரம் நீடித்த மின்வெட்டு அசாதாரணமானது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. வளாகத்திற்கு மின்சாரம் வழங்கும் BSES, அதன் இணையதளத்தில் மின்சார செயலிழப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, அக்கம்பக்கத்தில் "பராமரிப்பு செயலிழப்பு" க்கான அதன் கடைசி தகவல் பதிவு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை.
ஒரு முதுகலை மாணவர் கூறுகையில், “எங்களுக்கு விடுதிகளில் மின்சாரம் அல்லது இணையம் இல்லை. நாங்கள் எங்கள் வார்டனை அணுகினோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை,” என்று கூறினார்.
#LIVE | JNUSU president to lodge police complaint
— Express Delhi-NCR (@ieDelhi) January 24, 2023
For more, follow live updates:https://t.co/6X0s5C9edu pic.twitter.com/hEKcwnJFUk
மின்வெட்டு ஆசிரிய குடியிருப்புகளையும் பாதித்தது, என்று பல பேராசிரியர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஒரு வீடியோவில், JNUSU தலைவர் ஐஷே கோஷ் QR குறியீடு கொண்ட காகிதத்தை அசைப்பதைக் காணலாம். "அவர்கள் ஒரு திரையை மூடினால், நாங்கள் நூற்றுக்கணக்கான திரைகளை இயக்குவோம்," என்று அவர் கூறுவது வீடியோவில் கேட்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/jnu-student.jpg)
பின்னர் பேசிய ஐஷே கோஷ், “JNUவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன, ஆனால் நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கவில்லை. இது முதல்முறையாக நடக்கிறது” என்று கூறினார். மேலும், மின்வெட்டு ஏற்படும் போதெல்லாம், வளாகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் "அறிவிக்கப்பட்டது" "ஆனால் இந்த முறை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை" என்றும் அவர் கூறினார்.
இரவு 10.30 மணியளவில், ஆவணப்படத்தைப் பார்க்க கூடியிருந்த மாணவர்கள் கூட்டத்தின் மீது சில கற்கள் வீசப்பட்டன, ஆனால் இருட்டில், அவை எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை.
JNU asks to cancel the screening of the documentary "India: The Modi Question" scheduled for 24th Jan by a group of students stating that "such an unauthorised activity may disturb peace & harmony in the University.". pic.twitter.com/yQwDah9xx7
— ANI (@ANI) January 23, 2023
அரசியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பி.எச்.டி மாணவர் ஒருவர் தோளில் அடிபட்டதாகவும், மற்றவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் பிரதான வாயில் வரை பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பியபடி இரவு 11.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வெட்டு மற்றும் கல் வீச்சு குறித்து கேட்டபோது, காவல்துறை டி.சி.பி (தென்மேற்கு) மனோஜ் சி, “JNUவின் எந்தப் பிரிவிலிருந்தும் புகார் வந்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
JNUSU gave a call for screening of the "India:The Modi Question" documentary which was blocked by Modi Govt.The JNU admin siding by the govt snapped electricity-internet to stop the screening from happening. ABVP attacked students. However students of JNU carried out screening.✊🏾 pic.twitter.com/ggJnQjVcFo
— Mayukh Biswas (@MayukhDuke) January 24, 2023
இரவு 11 மணிக்கு மேல், வளாக வாயிலுக்கு வெளியே இரண்டு PCR வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
திங்களன்று, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை திரையிடலுக்கு செல்ல விடாமல் தடுத்தது. இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிகழ்ச்சிக்கு JNU நிர்வாகத்திடம் இருந்து முன் அனுமதி பெறப்படவில்லை. இது போன்ற அங்கீகரிக்கப்படாத செயல்பாடு பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்பதை வலியுறுத்துகிறோம். சம்பந்தப்பட்ட மாணவர்கள்/தனிநபர்கள் முன்மொழியப்பட்ட திட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு உறுதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள், தவறினால் பல்கலைக்கழக விதிகளின்படி கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை தொடங்கப்படலாம்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/jnu-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/jnu-gate.jpg)
இதற்குப் பதிலளித்த மாணவர் சங்கம்: “ஸ்கிரீனிங் என்பது மாணவர்களின் தன்னார்வச் செயலாகும்... பல்கலைக்கழக வளாகத்தில் எந்தவொரு திரைப்படம்/ ஆவணப்படத்தையும் திரையிடுவதற்கு நிர்வாகத்திடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் JNU சட்டம்/ விதிமுறைகள்/ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விதிமுறைகளை தயவுசெய்து குறிப்பிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், “ஆவணப்படம்/ திரைப்படத்தைத் திரையிடுவதன் மூலம், எந்தவிதமான ஒற்றுமை சீர்குலைவையும் உருவாக்க நாங்கள் முயலவில்லை. திரையிடலின் நோக்கம் வளாகத்தில் ஆவணப்படத்தைப் பார்ப்பது மட்டுமே. தன்னார்வ ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே திரையிடலில் பங்கேற்பார்கள்,” என்றும் மாணவர்கள் சங்கம் கூறியது.
இந்தியாவின் "வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு" மற்றும் "நாட்டிற்குள் பொது ஒழுங்கை" "பாதகமாக பாதிக்கும் சாத்தியம்" ஆவணப்படத்திற்கு இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் கூறினர். பி.பி.சி ஆவணப்படம் 2002 குஜராத் கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அப்போதைய மாநில அரசாங்கத்தின் பதிலை மையமாகக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.