scorecardresearch

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்பு; ‘ஊழலற்ற அரசை வழங்குவோம்’ – ராகுல் காந்தி உறுதி

கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்பு; 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை

karnataka
கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே சிவகுமார் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், “மக்கள் எதிர்பார்க்கும் நிர்வாகத்தை நாங்கள் வழங்குவோம், 5 உத்தரவாதங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இன்றே நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவகுமாரும் இன்று (மே 20) பெங்களூரு ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்றுக் கொண்டனர். சித்தராமையா அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான ஜி பரமேஸ்வரா, கே.எச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்.பி பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையும் படியுங்கள்: துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்: மாநிலங்களில் துணை முதல்வர்கள், ஒப்பந்தங்கள் ஒரு பார்வை

பதவியேற்பு விழா காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், என்.சி.பி தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி,ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பேச்சுக்கு மத்தியில், இன்று நடைபெற்ற கர்நாடக அரசின் பதவியேற்பு விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரை காங்கிரஸ் அழைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, பிஜூ ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்பி தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரையும் கட்சி அணுகவில்லை என்றாலும், மூன்று கட்சிகளும் எதிர்க்கட்சி குழுவில் இருந்து விலகி இருப்பதால் அது எதிர்பார்க்கப்பட்டது.

பதவியேற்பு விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது என்று பல விஷயங்கள் எழுதப்பட்டன, வெவ்வேறு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன, ஆனால் நாங்கள் ஏழைகள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுடன் சேர்ந்து இருப்பதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று நான் கூற விரும்புகிறேன். ஏழைகளே, எங்களிடம் உண்மை இருந்தது. பாரதிய ஜனதாவிடம் பணம், போலீஸ் மற்றும் அனைத்தும் இருந்தன, ஆனால் கர்நாடக மக்கள் அவர்களின் அனைத்து அதிகாரங்களையும் தோற்கடித்தனர்.

சித்தராமையா தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய 5 உத்தரவாதங்களையும் இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றும். நாங்கள் உங்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கினோம், நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை, நாங்கள் சொல்வதை நாங்கள் செய்கிறோம், தூய்மையான, ஊழலற்ற அரசை உங்களுக்கு வழங்குவோம்” என்று கூறினார்.

5 வாக்குறுதிகள்

க்ருஹ லக்ஷ்மி: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வீட்டின் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் அவர்களின் சொந்த வாழ்க்கையின் பொறுப்பில் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நாங்கள் பணத்தை அவர்களின் கைகளில் கொடுக்கிறோம்” என்று அறிக்கை கூறுகிறது.

யுவ நிதி: இத்திட்டம் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ₹3,000 மற்றும் வேலையில்லாத டிப்ளமோதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹1,500 வழங்குவதன் மூலம் கர்நாடக இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அன்ன பாக்யா: இந்தத் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் (BPL) உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

க்ருஹ ஜோதி: இத்திட்டம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக உறுதியளிக்கிறது.

சாகி திட்டம்: கர்நாடகாவில் பெண்கள் பயணம் செய்ய இலவச பேருந்து டிக்கெட்டுகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ஜப்பான் செல்லும் போதெல்லாம், பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு உத்தரவை பிறப்பித்து மக்களை தொந்தரவு செய்கிறார்” என்று கூறினார்.

கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற டி.கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். “கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமையா ஜி மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமார் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பயனுள்ள பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், புதிய முதல்வராக பதவியேற்ற சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். “கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மாநிலத்தை கடன் வலையில் தள்ளாமல் உத்தரவாதங்களை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, எங்களுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது, என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka cm swearing in ceremony updates siddaramaiah shivakumar congress

Best of Express