Advertisment

முந்த்ரா போதைப்பொருள் வழக்கு; கடத்தல்காரர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – என்.ஐ.ஏ

குஜராத் முந்தரா துறைமுகத்தில் ரூ.21000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு; கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
முந்த்ரா போதைப்பொருள் வழக்கு; கடத்தல்காரர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – என்.ஐ.ஏ

Deeptiman Tiwary

Advertisment

Mundra drug haul: Smugglers linked to Pak terror groups, NIA tells court: கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் பிடிபட்ட சுமார் 3,000 கிலோ ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 11 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 4 இந்தியர்கள் மற்றும் 1 ஈரானியர் என 16 பேர் மீது என்ஐஏ திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் இந்த ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் இந்த சரக்கு 21,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

"குற்றம் சாட்டப்பட்ட முகமது ஹசன் ஹுசைன் தாத் மற்றும் முகமது ஹசன் தாத் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாகிஸ்தானில் உள்ள தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானம், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவின் பேரில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்த, ஹவாலா சேனல்கள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, ”என்று NIA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹசன் தாத் மற்றும் ஹுசைன் தாத் ஆகிய இருவரும் ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள M/s ஹசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம் தான், அரை பதப்படுத்தப்பட்ட டால்க் கற்கள் என அறிவித்து, போதைப்பொருட்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சரக்கு கந்தஹாரில் இருந்து வந்துள்ளது மற்றும் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக அனுப்பப்பட்டது. இந்தியாவில், சென்னையைச் சேர்ந்த தம்பதிகளான மச்சவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி கோவிந்தராஜு துர்கா பூர்ணா வைஷாலி ஆகியோரால் நடத்தப்படும் ஆந்திராவைச் சேர்ந்த M/s ஆஷி டிரேடிங் நிறுவனத்திற்கு இந்த சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: டெல்லி ரகசியம்: ‘மோடி..மோடி..மோடி..’ முழக்கமிட்ட எம்பி.க்களால் திகைத்த லோக்சபா

“விசாரணையின் போது, ​​இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள், முன்பும் அதே குற்றம் சாட்டப்பட்ட நபர்களால் நடத்தப்பட்டது என்பது உறுதியானது. டெல்லியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து 16.105 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு, டிஆர்ஐ டெல்லி மண்டல பிரிவு பதிவு செய்த வழக்கு; மற்றும் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் 20.250 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு, 01.07.2021 தேதியிட்ட வழக்கு FIR எண். 90/2021 PS கர் ஷங்கர் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த இரண்டு குற்றங்களும் உடனடி வழக்கில் இணைக்கப்பட்ட குற்றங்களாக இணைக்கப்பட்டன” என்று என்ஐஏ கூறியது.

குற்றம் சாட்டப்பட்ட ஹசன் மற்றும் ஹூசைன் மற்றும் M/s ஆஷி டிரேடிங் கம்பெனியின் எம்.சுதாகர், டி.பி. வைஷாலி மற்றும் ராஜ்குமார் பெருமாள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து, அரை-பதப்படுத்தப்பட்ட டால்க் சரக்குகளில் மறைத்து இந்தியாவுக்கு பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்துவதற்கான குற்றச் சதியில் ஈடுபட்டதாக NIA கூறியது.

"செப்டம்பர், 2021 இல் அனுப்பப்பட்ட சரக்கு இடைமறிக்கப்பட்டது, அதேசமயம் முந்தைய சரக்குகள் டெல்லி மற்றும் பஞ்சாபில் விநியோகம் செய்வதற்காக டெல்லியில் உள்ள ஒரு கிடங்கில் பெறப்பட்டு சேமிக்கப்பட்டன" என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஏஜென்சியால் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட 16 பேரில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மச்சவரம் சுதாகர், அவரது மனைவி டிபி வைஷாலி, ராஜ்குமார் பெருமாள் மற்றும் பிரதீப் குமார்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது கான் அக்லாகி, சையது முகமது ஹுசைனி, ஃபார்டின் அமெரி, சோபன் ஆர்யன்ஃபர், அலோகோசாய் முகமது கான் மற்றும் முர்தாசா ஹக்கிமி ஆகியோர் அடங்குவர். ஹசன் மற்றும் ஹூசைன் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஜாவத் நஜாபி மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளான நஜிபுல்லா கான் காலித், எஸ்மத் உல்லா ஹொனாரி மற்றும் அப்துல் ஹாடி அலிசாதா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Gujarat Mundra Drug Haul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment