No plans regarding passenger train now says railway ministry : இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது. 17ம் தேதியில் இருந்து ரயில்கள் அனைத்தும் இயங்கும் என்று பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவியது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம்.
Certain media reports have come on a post lockdown "restoration plan" with train details,frequency etc. It is to clarify that no such plan regarding the resumption of passenger services has been issued.All concerned would be duly informed about any further decision in this regard
— Ministry of Railways (@RailMinIndia) April 4, 2020
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் மக்களுக்காக இயக்கப்படுகிறது. கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த ரயில்களை பயன்படுத்த திட்டம் ஏற்பாடாகி வருகிறது. அனைத்து மண்டலங்களிலும் வாரத்திற்கு 10 தனிமைப்படுத்தப்பட்ட கோச்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.